states

ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சென்னை, செப்.9- திரைப்பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் 2 படங்களை தயாரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கி யிருந்தார். பின் அந்த படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக் காமல் 130 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனா லும் அவர் வாங்கிய கடனை செலுத்தா மல் மற்ற கடன்களை செலுத்தியி ருக்கிறார். இதையடுத்து, வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடனுக் காக அடமானம் வைத்த அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து கடன் வசூலிப்பு தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ரவி சந்திரன் வழக்கு தொடர்ந்து இடைக்கால நிவாரணம் பெற்றார். இறுதியாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி ஏலம் குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தெடர்ந்தார். அதில், கடன் பாக்கித் தொகை 37.90 கோடி ரூபாயை ஒரே தவணையில் செலுத்துவதாக கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆர்.மாலா ஆகி யோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் அவர்  கடன் தொகையை திருப்பி செலுத்த வில்லை. மேலும் உயர்நீதிமன்றத்தை தவறான பயன்படுத்துகிறார் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்ட தால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் ஆஸ்கார் நிறுவனத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன், உயர்நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். எனவே, அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

;