states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அக்.25ல் தமிழக தேர்தல் அதிகாரி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

சென்னை, அக்.19- 2024-நாடாளுமன்றத் தேர்தல்  ஏற்பாடுகள் தொடர் பாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும் சென்னை யில் அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிப் பிரதிநிதி களுடன் அக்டோபர் 25 அன்று தமிழக தேர்தல் அதி காரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அக்டோபர் 27 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட உள் ளது குறிப்பிடத்தக்கது.

கவுடாவின் மகனாவார். வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய உதவியதால் இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு சிவசேனா குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்தின் காசா பகுதி யில் இஸ்ரேலின் இடை விடாத தாக்குதலால் தினமும்  நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள்  கொத்துக்கொத்தாக உயிரிழக்கின்றனர். காசாவில் இதுவரை உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 4000-த்தை நெருங்கி யுள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்திருக்கின் றன. பாலஸ்தீனத்துக்கு சீனா, ரஷ்யா, ஈரான், சிரியா, சவூதி அரேபியா, ஏமன், கத்தார், தென் ஆப்பிரிக்கா, லெபனான் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்  தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்  மனி, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ஸ்பெ யின், போலந்து, உக்ரைன், ஆஸ்திரே லியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவ ளித்திருக்கின்றன.  பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கா மல் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தது தொடர்  பாக மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ள நிலையில், வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய உதவியதால் இஸ்  ரேலை பாஜக ஆதரிப்பதாக சிவசேனா (யுடிபி) கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  இதுதொடர்பாக சிவசேனா (யுடிபி) மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய்  ராவத் கூறுகையில்,”மின்னணு வாக்கு  இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யும்  தொழில்நுட்பத்தை கொடுத்ததற்காக வும், எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்  கேட்க மென்பொருளை தந்ததற்காக வும் இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு தெரி வித்துள்ளது. உலகில் என்ன நடக்கிறது என்பதே தேவேந்திர பட்னாவிசுக்கும், ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும் தெரிய வில்லை” என்று கூறினார்.