states

தமிழகத்தில் புதிய வகை கொரோனா ‘எக்ஸ் இ’ இல்லை: அமைச்சர் தகவல்

சென்னை,ஏப்.7- உலக சுகாதார தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா விற்கு அடிக்கல் நாட்டி, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,“மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்இ வகை தொற்று என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு  அந்த வகை தொற்று இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை தொற்று  எதுவும் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தாலும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியிருக்கிறோம்” என்றார். கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று  எண்ணிக்கை  சில மாவட்டங்களில் கணிசமாக அதிகரித்து வரும் சூழ்நிலை யில், இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுதப் பட்டுள்ளது என்றார். குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்க ளில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதாக குறிப்பிட்ட அவர், தொடர்ந்து உறுதி செய்யப்படும் மாதிரிகள்  பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.