states

நாடு முழுவதும் கேபிள், ரோப் கார்கள் ஆய்வு

புதுதில்லி, ஜூலை 11-  சமீப காலமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதை தொடர்ந்து, நாடு முழு வதும் மக்கள் பயன்படுத்தக் கூடிய ரோப் கார்கள், கேபிள் கார்களின் பாது காப்பு குறித்து தேசிய பேரிடர் படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பைத்யநாத் கோயி லுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகள் ரோப்  கார்களில் ஏறினர். அப்போது, இரு ரோப் கார்  கேபின்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் பலியா யினர்.  இதேபோல், இமாச்சல பிரதேசம் சோலன், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னா ஆகிய இடங்களில் கேபிள் கார்கள் திடீரென நடுவழியில் நின்றன. கேபிள் கார்களில் சிக்கி தவித்தவர் களை தேசிய பேரிடர் மீட்பு  படை (என்டிஆர்எப்) வீரர்கள் மீட்டனர்.  இந்த ஆண்டில் 3 விபத்து கள் நிகழ்ந்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள ரோப்  கார், கேபிள் கார் சேவை களில் பாதுகாப்பு குறைபாடு கள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு நடத்தி வருகிறது. இந்த சோதனை களால் ரோப் கார், கேபிள் கார்களை இயக்குபவர்கள் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கவும், இனி விபத்துகள் நிகழ்ந் தால் செயல் திட்டம் வகுப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று என்டிஆர்எப்பின் இயக்கு நர் ஜெனரல் தெரிவித்துள் ளார்.