states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பெகாசஸுக்குப் பதிலாக “காக்னிட்” என்ற புதிய ஸ்பைவேரை மோடி அரசு  வாங்கியுள்ளது. இதற்காக மக்களின் வரிப்பணம்  ரூ.986 கோடி செலவிடப்பட உள்ளது.  காக்னிட் ஸ்பைவேரை  வைத்து  பத்திரிகையா ளர்கள், அரசுக்கு எதிராக விமர்சகர்கள், எதிர்க் கட்சி உறுப்பினர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர் களை குறிவைப்பதாக அமெரிக்க சட்ட நிறு வனம் ஒன்றின் அறிக்கை  கூறியுள்ளதாக  காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா குற்றம்சாட்டியுள் ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பஜா ரில் ஒரு கடையில் ஏற் பட்ட தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவிய நிலையில், 40 கடைகள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தில் உயிர் சேத மோ, யாருக்கும் காயமோ  ஏற்படவில்லை என்றா லும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்தன.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத் தில் முறையீடு செய்யப் பட்ட நிலையில், சிபிஐ  தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்  கேட்டதால் விசாரணை ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ, சோபியா பல்கலைக்கழகத்தில் பயி லும் மாணவர்கள் கட்டு ரைகள், அறிக்கைகள் அல் லது ஆய்வறிக்கைகளை எழுதுவதற்கு சாட் ஜிபிடி -யைப் பயன்படுத்து வதற்கு இரு பல்கலைக் கழக நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.

தென்காசி மாவட்டம் சிவ கிரி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் பெரிய ஆவடைப்பேரி பகுதி யில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வே லியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புனித வெள்ளி, ஈஸ்டர் தினத்தை கொண்டாட அந்நாட்டு கடற்கரை களில் மக்கள் அதிகளவில் கூடினர். பெற்றோர் துணையின்றி குழந்தை களும் மற்றும் மதுபோதை யில் கடல் அலையில் சிக்கி என ஒரே வாரத்தில் 72 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஓமன் நாட்டின் தீவிர  முயற்சியால் சவூதி அரேபிய அரசிற்கும், ஹவுதி கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ஏமன் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. 

திருச்சி பகுதியில் கட்டு மானப்பணிகள் காரண மாக வரும் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 12-ஆம் தேதி சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயில் திருச்சி வரையே செல்லும், அதேநாளில் மறுமார்க்கமாக செல்லும் அந்த ரயில் திருச்சியில் இருந்தே சென்னை புறப்படும்.