புதுதில்லி, மே 11- நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும் எனவே அந்த மாநிலங்களில் அவர் களை சிறுபான்மையினராக வகைப் படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண் டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்த மனு மீது ஏற்கெனவே பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்தி ருந்த ஒன்றிய அரசு, சிறுபான்மை யினர் அந்தஸ்து கொடுக்கும் விவ காரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தது. இதற்கிடையில் புதிய பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த ஒன் றிய அரசு, இவ்விவகாரத்தில் முடி வெடுக்க வேண்டிய அதிகாரம் ஒன் றிய அரசிடம்தான் இருக்கிறது என முந்தைய கருத்திலிருந்து அப்படியே பல்டி அடித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலை மையிலான அமர்வில் செவ்வா யன்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசின் இந்த மாற்று நிலைப்பாட்டை நீதிபதிகள் கடுமை யாக விமர்சித்தனர்.
“நீதிமன்றத்தில் ஒரு விஷயத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக பல ஆலோசனைகளை முன்வையுங் கள் ஏனென்றால் அனைத்தும் பொது வெளிக்கு வந்துவிடும். இது தேவை யில்லாத குழப்பங்களை ஏற்படுத் தும். இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனத்துடன் இருங்கள்” என ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் நீதி பதிகள் எச்சரித்தனர். மேலும், “நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா வற்றையும் நீதிமன்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பிற சமூ கத்தை விட எண்ணிக்கையில் குறை வாக உள்ள இந்துக்களுக்கு சிறு பான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மாநிலங்களுடன் கலந் தாலோசிக்க விரும்பினால், அவ் வாறு செய்ய வேண்டியதுதானே...” எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பின்னர், 10 மாநிலங்களில் இந் துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநில அரசு களுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வர ஒன்றிய அரசுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங் கிய நீதிபதிகள் மேலும் வழக்கு விசா ரணையை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.