மே 31- மாநில முதல்வருடன் பிரதமர் மோடி உரையாடல்
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30ந்தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக இமாசல பிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்த படியே மே 31-ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார்.
கியூட் தேர்வுக்கு அவகாசத்தை நீட்டித்தது யுஜிசி!
ஒன்றிய அரசின் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு ‘கியூட்’ (CUET) எனும் பொது நுழைவுத்தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 22 மத்திய பல்கலைக்கழகங்களும் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளன. இளங்கலைப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொண்டா லும், முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது என்று கூறி யுள்ளன. இதனிடையே, கியூட் இளங்கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 31 இரவு 9 மணிவரை நீட்டித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகள் உருவாக்க குழு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகளை உருவாக்கும் குழுவில் நகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர். கட்டட விதிகள், குடிநீர் விதிகள், கழிவுநீர் விதிகள், திடக்கழிவு மேலாண் விதிகள் உருவாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, வரிவிதிப்பு, உரிய அனுமதி தொடர்பான விதிகளையும் இந்த புதிய குழு உருவாக்கும். புதிய விதிகளை உருவாக்குவது தொடர்பான அறிக்கையை ஜூன் 10-க்குள் சமர்ப்பிக்கவும் இக்குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளத்திற்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வந்தது!
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வரு கிறது. இரண்டாவது அணு உலை கடந்த மார்ச் மாதம் எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணு உலையின் மின் உற்பத்திக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு அங்கிருந்து 4 லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாது காப்புடன் சனிக்கிழமையன்று காலை கூடங்குளத்தை வந்தடைந்தது.
பஞ்சாப்பில் 424 பிரமுகர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
பஞ்சாப் மாநிலத்தில் முக்கியப் பிரமுகர்கள் 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாது காப்பை முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பிற தலைவர்கள் உள்பட 184 பேரின் பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே மேலும் 424 பேரின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பீகாரில் மாநிலங்களவைக்கு லாலு மகள் வேட்புமனு!
பீகாரில் இருந்து விரைவில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறி விக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மாநில எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாஜக, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் தலா 2 இடங்களி லும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஓரிடத்திலும் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது. இதனடிப்படையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி சார்பில், அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியும், முன்னாள் எம்.எல்.ஏ. பயாஸ் அகமதுவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் வெள்ளியன்று தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.