சென்னை, மே 18- பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு நடப்பாண்டில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 500 இணைக ளுக்கு திருமணம் நடந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக 100 திரு மணங்கள் நடத்தப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்க ளின் சார்பில் நடத்தப்படும் இலவச திருமணங்களில் ஒரு இணை திருமணத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ள திட்டச் செலவினத் தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிர மாக உயர்த்தி அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. திருமண இணை களுக்கு தாலி 4 கிராம், மணமக்கள் ஆடை, மாலை, 20 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.