states

img

மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் கருத்தரங்கம்

ஈரோடு, நவ.22- மாவீரன் திப்பு சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கில், ஈடு இணையற்ற மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. மாநில உதவித்தலைவர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். டீம் அகாடமி செயலாளர் ஏ.ஹாத்திம்தாய் வரவேற்றார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சா.பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திப்புவிற்கு மணி மண்டபம், இஸ்ரேல் போர் நிறுத்தம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, வினாடி – வினா போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், எஸ்.ஏ.ராம்தாஸ் நன்றி கூறினார்.