இன்று மதுரை தமுக்கத்தில் அரசுப் பொருட்காட்சி துவக்கம்
மதுரை,ஏப்.28- மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட் காட்சி – 2023 தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ஏப்ரல் 28 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், மதுரை சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருட்காட்சியை சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் “அரசுப் பொருட்காட்சி – 2023“ தொடக்க விழா ஏப்ரல் 29 மாலை 5 மணியள வில் நடைபெறவுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்று கிறார். வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி-மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனை வர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளை யாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 29.04.2023-அன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 03.45 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறும். நுழைவு கட்டமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நிர்ண யிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து அரசுப் பொருட்காட்சியினை கண்டுகளித்திடலாம் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இ.சாலி தளபதி. சு.மகேஸ்வரன் உட்பட பலர் உடனி ருந்தனர்.
மின்னல் தாக்கியதில் பால் வியாபாரி பலி
விருதுநகர், ஏப்.28- விருதுநகர் அருகே சூலக்கரையில் மின்னல் தாக்கிய தில் பால் வியாபாரி உயிரிழந்தார். விருதுநகர் அருகே உள்ளது சூலக்கரை. இங்குள்ள பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி(26). அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலை யில் வெள்ளியன்று மாலை சூலக்கரை பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வழக்கம் போல வீடுகளுக்கு பால் விநியோ கம் செய்து விட்டு ராஜபாண்டி திரும்பி கொண்டி ருந்தார். மாத்தநாயக்கன்பட்டி சாலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிய உணவுடன் ரூ.300க்கு ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு
விருதுநகர், ஏப்.28- விருதுநகர் மாவட்டத்தில் மதிய உணவுடன் ரூ.300க்கு ஒரு நாள் சுற்றுலா செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்களை கண்டு களிப்பதற்கும், மக்கள், மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கு சிறப்பு சுற்று லாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒருநாள் கீழடி சுற்றுலா, ஒருநாள் பாரம்பரிய மரபு பயணம், ஒருநாள் உள்ளூர் சுற்றுலா ஆகிய சுற்றுலாக்கள் செல்ல மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து ஏற் பாடு செய்துள்ளது. கீழடி அருங்காட்சியகம் ஒருநாள் சுற்றுலாவில், சுற்றுச்சூழல் பூங்காவிற்கும், ஒருநாள் பாரம்பரிய மரபு பயணத்தில் மூவரை வென்றான் குடவரைக் கோவில், குன்னூர் குத்துக் கல், கல்தூண் மண்டபங்கள், நடு கற்கள், பெருங் கற்கால நினைவிடங்கள், நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கும், ஒருநாள் உள்ளூர் சுற்றுலாவில் செண்பகத்தோப்பு, திருவில்லி புத்தூர் ஆண்டாள் கோயில், நாயக்கர் ஆண்ட அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து உள்ளது. விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் காலை 9 மணிக்கு பேருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நபர் ஒன்றுக்கு ரூ.300 மட்டும். வாரந்தோறும் சனிக் கிழமை சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர் எண் 73977 15688ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் எஸ்.பி., மீட்ட மூதாட்டியை தேடி வந்த மகள்
விருதுநகர், ஏப்.28- திருவில்லிபுத்தூமர மாரியம்மன் கோயில் தெருவில் 70வயது மூதாட்டி வெயிலிலும், மழையிலும் அப்பகுதி தள்ளு வண்டியின் அடியில் படுத்துக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப் பெருமாள் மூதாட்டியை மீட்டு உடை உணவு வழங்கி திருவில் லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், அவர் சிகிச்சை பெறும் வரை காவலர் ஒருவரையும் அங்கிருக்க உத்தரவிட்டார். இந்தநிலையில், இதுகுறித்த தகவல் பத்திரிகையில் வெளியானதை அறிந்து, சிவகாசி முனீஸ் நகரைச் சேர்ந்த சரோஜா என்பவர் மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை பெற்று வருவது தனது தாய் ராமுத்தாய் என தெரிவித்தார். மேலும், மூதாட்டியின் உடனிருந்து அவரைக் கவனித்து வருகிறார்.
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு
மதுரை, ஏப். 28- மதுரையில் நிதி நிறுவ னங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரில் இயங்கி வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடி செய்து விட்டதாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 385 முதலீட்டாளர்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட வர்கள், தபால் தந்தி நகர் பார்க் டவுன் பகுதியில் இயங்கி வரும் பொருளா தாரக் குற்றப்பிரிவில், பணம் கட்டிய அசல் ரசீதுகள் மற்றும் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். இதேபோல, மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் முதல் தெருவில் இயங்கி வந்த நிதி நிறுவனம் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாகவும், அதற்கு ஈடாக வீட்டடி மனைகள் வழங்குவதாகவும் விளம்ப ரப்படுத்தியதால் ஏராளமா னோர் பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் அந்தநிதி நிறுவனம் மீது மதுரை பொரு ளாதா ரக்குற்றப்பிரிவு காவல்துறையினர் தன்னிச் சையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் முதலீடு செய்த ஆவ ணங்களுடன் புகார் அளிக்க லாம். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
வடகரை வாய்க்கால் கரையில் சாலை அமைத்திடுக ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சின்னாளப்பட்டி,ஏப். 28- நிலக்கோட்டை வடகரை வாய்க்கால் கரையில் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர் காசிமாயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிலக்கோட்டை ஒன்றியம் பெரியார் பிரதான கால்வாய் வடகரை வாய்க்கால் கள் கரையில் சாலை அமைப்பது சம்பந்த மாக பலமுறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை/ பெரியார் பிரதான கால்வாய் வடகரை வாய்க்கால் கரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்று மதுரை மாவட்டம் கருப்பட்டியில் சாலையில் சேருகிறது.இருபுறம் நஞ்சை வேலைகள் சுமார் 5000 ஏக்கர் ஆகும். வாழை தென்னை நெல் மற்றும் பூக்கள் விவசாயிகள் பயிரிட்டு மேற்படி வடகரை வாய்க்காலின் மூலம் கொண்டு வருகின்றனர். மதுரை, நிலக்கோட்டை, திண்டுக்கல் மார்க்கெட்டு க்கு தலைச் சுமையாக சுமந்து வந்து விளாம்பட்டி கிராமத்துக்குள் வந்து செல்ல வேண்டி உள்ளது மேலும் உரம் எரு, இடு பொருட்கள் மூலம் விவசாயிகள் கொண்டு செல்வதிலும் தலைச்சுமையா கவே செல்ல வேண்டி உள்ளது எனவே தாங்கள் தலையிட்டு விவசாயிகள் நலன் கருதி வடகரை வாய்க்கால் கரையில் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தனியார் மதுபார்களுக்கு மதுபாட்டில்கள் கடத்தல் டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு : ஒருவர் கைது
தேனி ,ஏப்.28- டாஸ்மாக் மதுக்கடையிலிருந்து தனி யார் மதுபார்களுக்கு மது பாட்டில்களை கடத்திய நபரை கைது செய்த மது விலக்கு காவல்துறையினர் ,டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை கள் குறைக்கப்பட்டு தனியார் மதுக்கடை களுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கி வருகிறார்கள் .தனியார் மது பார்களுக்கு டாஸ்மாக் கிட்டங்கிகளில் கூடுதல் வரி செலுத்தி மது வாங்கி விற்பனை நடை பெற்று வருகிறது .இதனால் இவர்க ளுக்கு கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனைவிலையை விட ரூ 5 கூடுதல் கொடுத்து விலைக்கு வாங்கி தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டு வருகிறது . இந்நிலையில் தேனி அருகே அன்னஞ்சி விலக்கு அருகே பிக்கப் வேனில் மது பாட்டில்களை கடத்தி வந்த எம்.சுப்புலா புரத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரை கைது செய்த காவல்துறையினர் 768 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். டாஸ்மாக் விற்பனையாளர் பாலமுருகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து 7 பேர் தனுஷ்கோடி வருகை
இராமேஸ்வரம்,ஏப்.28- இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடருவதால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்து தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தனுஷ்கோடி 3 ஆம் மணல் தீடையில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் அகதிகள் இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு வெள்ளிக் கிழமை தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து,போலீசார் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் சென்ற கடலோர காவல்படையினர் தீடை யில் தவித்த 7 அகதிகளை பத்திரமாக மீட்டு அழைத்து வந்து தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதனைதொடர்ந்து, மண்டபம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இலங்கை முல்லைத்தீவு தீர்த்த கரையை சேர்ந்து நியூட்டல் வில்லி யம்(40)அவரது மனைவி வனிதா(38) மற்றும் ஷாலினி(17)விஷால்(15)தோணி (10)ஜோன்(8)ஆதீஸ் ஒன்றரை வயது குழந்தை என தெரிவித்தனர். 7 பேரையும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது வரையில் இலங்கையில் இருந்து 244 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
குப்பைத் தொட்டியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிப்பு
மதுரை, ஏப்.28- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 (மத்தியம்) வார்டு எண்.58 ஹார்விநகர் பகுதியில் உள்ள மாநக ராட்சி குப்பைத் தொட்டியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படை யில் மாநகராட்சி நகர்நல அலுவலர் ஏப்ரல் 27 அன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாநகராட்சி குப்பைத் தொட்டியில் தனியார் மருத்துவ மனையில் இருந்து ஏற்கனவே செலுத்திய ஊசிகள், பஞ்சுகள், குளுக்கோஸ் டியூப், கையு றைகள், பி.பி.கிட், மருந்து குடுவைகள், மருத்துவமனை அலுவலக குறிப்புகள், முகக்கவசம், சிறுநீர்பைகள், குளுக்கோஸ்பாக்ஸ், மூடிகள் மற்றும் நோயாளி பயன் படுத்திய உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இக்கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவ மனைக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்கான குப்பைத் தொட்டியில் மருத்துவ கழிவுகளை கொட்டியமைக்காக ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேற்படி தனி யார் மருத்துவமனை இதுபோன்ற செயல்களை வருங் காலங்களில் செய்யக்கூடாது எனவும் மீறினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் நகர்நல அலுவலர் மரு.வினோத் குமார், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.
வேகத்தடை இல்லாததால் தொடரும் விபத்துகள் : இராஜபாளையம் அருகே மக்கள் மறியல்
இராஜபாளையம், ஏப். 28- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரது மகன் மார்டின். 7 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் லியாழனன்று வீட்டின் அருகே அரசரடி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பெட்டி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள விலக்கனூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த சிஜோ என்பவர் ஓட்டி வந்த கார் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெட்டி கடையில் நின்று கொண்டிருந்த மார்டின் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். முதலுதவிக்கு பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுவதால் உடனடியாக வேகத்தடை அமைக்க கோரி மார்டினின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல் துறையினர் அவர்களை அலட்சியம் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி ப்ரீத்தி மற்றும் சேத்தூர் காவல் துறையினர் பொது மக்களிடம் பேசினர். ஒரு வாரத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல் துறை அதிகாரி களின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சரை பெண்கள் முற்றுகை
மதுரை,ஏப்.28- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. அதில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அப்போது நூறு நாள் வேலை கேட்டு பெண்கள், சட்டமன்ற உறுப்பினர் உதய குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி மற்றும் அதிமுகவினரை முற்றுகை யிட்டனர். இதனால் திகைத்த ஆர் பி உதய குமார் ஊராட்சி மன்ற தலைவர் ஆலய மணியிடம் முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துமாறு கூறினார். 100 நாள் வேலை பார்க்கும் பெண்களை கட்சியினர் என்று கூறி கூட்டத்திற்கு அழைத்து வந்தனர் என்று அப்பெண்கள் கூறினார்.
திண்டுக்கல் அருகே மர்ம நோய் தாக்கி மாடுகள் பலி : இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
திண்டுக்கல், ஏப்.28. திண்டுக்கல் அருகே தெப்பத்துக்குளத்துப் பட்டி யில் மர்மமான முறையில் 21 மாடுகள் இறந்தது தொ டர்பாக பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரியுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர கத்தில் வெள்ளியன்று நடை பெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செய லாளர் ராமசாமி, மற்றும் மாவட்டத்தலைவர் என்.பெருமாள் ஆகியோர் பேசும் போது. தாடிக்கொம்பு அருகே யுள்ள தெப்பத்துக் குளத்துப்ப ட்டியில் நேற்று வரை 21 கறவை மாடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. இப்போதும் அந்த நோய் தாக்குதல் இருந்து வருகிறது. இது தொ டர்பாக தமிழ்நாடு பால்உற் பத்தியாளர் சங்கம் சார்பாக மாநில பொருளாளர் சங்கர் கால்நடைத்துறை அமைச்ச ரிடமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார். எனவே அந்த கிராமத்தில் பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளர்க ளுக்கு ஒரு மாட்டுக்கு ஒரு லட்சம் வீதம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த மாடுகள் இறப்பதற்கு என்ன காரணம் என்று ஒன்றிய கால்நடை பல்கலைக்கழகத்தில் இறந்த மாடுகளின் உடற்கூறு மாதிரிகள் அனுப்பப்பட்டன. ஆனால் என்ன நோய் தாக்கி மாடுகள் இறந்துள் ளன என்பது குறித்து தெரி விக்கவில்லை. மண்ணில் நைட்ரேட் அதிகம் உள்ள தாக அதிகாரிகள் வாய்மொ ழியாக சொன்னார்கள். எனவே மாடுகளை இழந்த விவசாயிகளுக்கு வங்கிக் கடன் உதவி வழங்க வேண்டும்.
இன்சூரன்ஸ் மூலம் நிதி கிடைக்க நட வடிக்கை எடுக்க ஆட்சியர் முன்வரவேண்டும். மேலும் பழனி தட்டான்குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால் புது ஆயக்குடி அருகே நெடுஞ்சாலைத்துறையால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 12 அகலமுள்ள வாய்க் காலை 5 அடியாக குறைக் கப்பட்டுள்ளதால் தட்டான் குளத்தில் போதிய தண்ணீர் வராமல் உள்ளது. எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து 12 அடி வாய்க்கா லாக சரி செய்து தர வேண்டும் அதே போல் நிலக் கோட்டை அன்னசமுத்தி ரம் கண்மாய் ஆக்கிரமிப்பு களை அகற்றித்தர வேண் டும். ஆயக்குடி அருகே யுள்ள பெரியதுரை கோம்பை உன்னான் ஓடை பாதையும் சேதப்படுத்தப் பட்டுள்ளது. 60 அடியாக பாதை இருந்தது. விவசாயி கள் சென்று வர 20 அடி பாதையாவது அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் என்று ராம சாமி மற்றும் என்.பெருமாள் ஆகியோர் கேட்டுக்கொண்ட னர். உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாக ஆட்சியர் விசாகன் தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் பகுதி யில் உள்ள குளங்களிலும், தங்கள் பட்டா காட்டுக்குள் ளேயும் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண் டும் என்று ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் சங்க தலைவர் கருணாகரன் பேசினார். கோழிப் பண்ணையை மூட ஆட்சியர் உத்தரவு தாடிக்கொம்பு அருகே தெப்ப த்துக்குளத்துப் பட்டியில் மர்ம நோய் தாக்கி 21 மாடுகள் இறந்தன. மண் பரிசோதனையில் அதிக அளவு நைட்ரேட் இருப்பதா கவும், கோழிப்பண்ணையில் இருந்து வரும் பாக்டீரியா மூலம் பாதிக்கப்பட்டு மாடுகள் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற முடி வுக்கு கால்நடை அதிகாரி கள் வந்துள்ளனர். இதனை யடுத்து அப்பகுதியில் செயல்படும் கோழிப் பண்ணையை மூட வேண்டும் என்று ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள் ளார். மேலும் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து 6 மாடுகள் வாங்கித்தருவதாக உறுதியளித்தார்.
கர்நாடகா தேர்தல் : மாணிக்கம் தாகூர் எம்.பிக்கு கூடுதல் பொறுப்பு
விருதுநகர், ஏப்.28- கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலை யில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 5 மண்டல பார்வை யாளர்களை நியமித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்வகுமார் ஆகியோரும் அடங்குவர். மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏற்கனவே கர்நாடக மேலிட பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பி டத்தக்கது.