states

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம்!

தமிழக உழைப்பாளி மக்களுக்கு சிஐடியு வேண்டுகோள்

சென்னை, மார்ச்  13 - எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், கார்ப்ப ரேட்டுகளின் கூட்டுக்களவாணியாக செயல்பட்டு,  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை நிர்மூலமாக்கத் துடிக்கும் பாஜகவை தோற்கடிக்கவும்,  தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு அணியை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறச் செய்ய தமிழக உழைப்பாளி மக்க ளுக்கு  சிஐடியு மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிஐடியு மாநிலக்குழு கூட்டம்  மார்ச் 12 அன்று மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப்பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, துணை பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: என்.எல்.சி பங்கு விற்பனையை கைவிடுக! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 1956 ஆம் ஆண்டு என்.எல்.சி நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும், அனல்மின்நிலையம், சூரிய ஒளி, காற்றாலை மூலம் சுமார்  6 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நவரத்தின நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2022-2023 நிதியாண்டில்  ரூ.16,165 கோடி வருவாய் ஈட்டி ரூ.1426 கோடி நிகர லாபமாக பெற்றுள்ளது. தற்போது ஒன்றிய அரசின் கைவசம் உள்ள 79.2 சதவீத பங்குகளுக்கு டிவிடென்டாக பலநூறு கோடி ரூபாயை ஒன்றிய அரசுக்கு என்எல்சி நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கி வரு கிறது.

நெய்வேலி என்.எல்.சியில் மட்டும் 10 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 15 ஆயிரம் ஒப்பந்த  தொழிலாளர்களுமாக 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து லாபம் ஈட்டக்கூடிய பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பதற் கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது 7சதவீத பங்குகளை விற்கும் திட்டமும் என் எல்சி நிறுவனத்தை படிப்படியாக தனியார்மயமாக் கும் முயற்சியாகும். எனவே, நாட்டின் மின்சார தேவை யில் முக்கிய பங்காற்றிடும் என்எல்சி நிறுவனத்தின் 7 சதவீத பங்கு விற்பனை முடிவினை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.  . மின்வாரிய சீரமைப்பு தொடர்பாக  ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்க!  தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறு வனங்களான மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக்,  உள்ளாட்சி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு உள்ளாட்சி, ஊராட்சி நிறுவனங் களில், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.  உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளா ட்சி,  ஊராட்சி மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக் கான  குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும். நெல்கொள்முதல் நிறுவனங்களில் பல ஆண்டு களாக பணிபுரியும் பருவகால பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

மனமகிழ் மன்றத்திற்கு லைசென்ஸ் வழங்காதே!

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறு வனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்து பணி தொடர்ச்சியுடன் நிலுவை தொகை உள்ளிட்ட அனைத்து பயன்களும் வழங்க வேண்டும். காலிபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எப்.எல்-2 ( FL - 2)  லைசென்ஸ் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

குவைத் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவித்திடுக!

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி, மோர் பண்ணை மற்றும்   திருவாரனை தாலுகா பாசிபட்டினம் ஆகிய மூன்று மீனவ கிராமங்களைச் சேர்ந்த 4 மீனவர்கள், குவை த்தில் மீன்பிடி ஒப்பந்த கூலிகளாக சென்றனர். இவர் கள் தொழில் செய்து மூன்று மாதம் ஆன சூழலில் அதே படகில் டிரைவராக பல வருடங்களாக முசிறி நாட்டை சேர்ந்த அரேபி ஒருவர் ஏற்கனவே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியாமல் மீன் பிடிக்கசென்ற இடத்தில் 05.12.2023 தேதியன்று குவைத் கடற்படையினர் கடத்தலில் தொடர்புடைய அரேபியையும் நமது நான்கு மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  ஒன்றிய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு தமி ழகத்தை சேர்ந்த அப்பாவியான நான்கு மீன வர்களை உடனடியாக விடுதலை செய்ய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழி லாளர்களுக்கான பஞ்சப்படியை உச்சநீதிமன்ற அறி வுறுத்தலின்படி  உடனடியாக வழங்க வேண்டும். நலவாரியத் துறையில் அழிந்துபோன லட்சக் கணக்கான தரவுகளை மீட்டெடுக்க வேண்டும், பதிவு, புதுப்பித்தல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வே ண்டும். மீண்டும் நேரடி பதிவை துவக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய பேச்சு வார்த்தையை துரிதப்படுத்தி தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அரசு அவசரகதியாக குடியுரிமைச் சட்ட விதிகளை அறிவித்து மக்களை துண்டாடும் முயற்சியை எதிர்த்து பிரச்சாரம் மற்றும் இயக்கங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.