கொல்கத்தா, ஏப்.17- தவறான எண்ணத்துடன் பெண் ணின் அந்தரங்க உறுப்புகளை தொடு வது பாலியல் வன்கொடுமைதான் என்று 13 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. மேற்குவங்கத்தில் நபர் ஒருவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து சிறுமி யின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடுகையில் , “ யாராகினும் சிறுமி யின் உடலில் எந்த பாகத்தை தொடுவ தன் மூலம் பாலியல் எண்ணத்தோடு தொடுகிறார் என குற்றஞ்சாட்டப்படு கிறது. எனவே, இதற்கான ஆதாரம் உள்ளதா என்பதை நிரூபிக்க வேண் டும். சிறுமியை சோதித்த மருத்துவர்,
அவருக்கு மார்பகங்கள் வளர்ச்சி அடை யவில்லை என்று தெளிவாக குறிப்பிட் டுள்ளார். எனவே இது பாலியல் சீண்ட லாக இருக்காது’ என கூறி வழக்கை தள்ளுபடி செய்ய கோரினார். வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பிபேக் சௌத்ரி, “இந்த வழக்கில் மார்பகங்கள் வள ர்ந்து இருந்ததா என்பது முக்கியமல்ல. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது உடலின் பல்வேறு பாகங்களை தொட்டு முத்தமிட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியிருக்கிறார். 13 வயது சிறுமிக்கு வளர்ச்சி அடையவில்லை என்றாலும் குறிப்பிட்ட பகுதி மார்பகம்தான். உட லுறவு கொள்ளாவிட்டாலும் கூட அந்த ரங்கப் பகுதிகளை தொடுவது என்பது பாலியல் ரீதியான சீண்டலாக தான் பார்க்கப்படுகிறது. சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது ஒருவயது வந்த நபர் ஏன் வீட்டிற்குள் நுழைந்து முத்தமிட வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார்.