தூத்துக்குடி.ஏப். 1 கோவில்பட்டி நகர்மன்றத்தில் நியமனக்குழு ( அப்பாயிண்ட்மெண்ட் கமிட்டி) உறுப்பினருக்கான தேர்தல் வெள்ளியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி நகரச் செயலாளரும், 27 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான தோழர் ஜோதிபாசு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று இருக்கிறர். நகராட்சி ஆணையர் ராஜாராம் , நகர்மன்ற தலைவர் கருணாநிதி முன்னிலையில் வெற்றி சான்றிதழை வழங்கினார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் சீனிவாசன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் இருந்தனர்.