புதுச்சேரி,மே.30- புதுச்சேரியில் ஜூன் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று யூனியன் பிரதேச கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தி யங்களில் 10 மற்றும் 11 ஆம் 12 ஆம்வகுப்பு களுக்கு கடந்த 5ஆம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வுகள் மே 31 அன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற வுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத் தலின்படி எதிர்வரும் 22-23ஆம் கல்வி ஆண் டிற்கு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தி யங்களில் 1 முதல் 10 மற்றும் 12 ஆகிய வகுப்பு களுக்கு அடுத்தமாதம் 23 ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியிடப்படும் அன்று முதல் அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக் கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்க புதுச் சேரி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு துவங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சி வாயம் கூறினார். இச்சந்திப்பின் போது கல்வித்துறை இயக்குநர் ருத்ரகௌடு உடன் இருந்தார்.