சென்னை, ஜூலை 13 - ‘போதையற்ற தமிழ்நாடு’ ஒரு கோடி கையெழுத்து இயக்க நிறைவு விழா மாநாடு ஞாயிறன்று (ஜூலை 16) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் போதை பொருட்கள் விநியோகம் அதிகரித்து வருகிறது. மக்களை திசைதிருப்ப சமூக விரோதிகள் திட்டமிட்டு போதை பொருட்களை புழக்க விடுகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருள் வியாபாரம் நடைபெறு கிறது. 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பி லான போதைப் பொருட்கள் புழங்கும் களமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் துணை யோடு சட்ட விரோதமான இந்த வியாபாரம் நடைபெறுகிறது. குஜராத்திலுள்ள அதானிக்கு சொந்தமான முந்ரா துறைமுகத்தி லிருந்து சில மாதங்களுக்கு முன்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதை தடுக்க ஒன்றிய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 11 விழுக்காடு அளவிற்கு மது விற்பனை உயர்ந்து வருகிறது. தேர்தல் வாக்குறு திப்படி, மது விற்பனை நேரத்தையும் அரசு குறைக்க வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை, இளைஞர்களை மீட்டெடுக்க ஆலோ சனைக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியி லும் போதை மீட்பு மையம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ‘போதையற்ற தமிழ்நாடு’ என்ற முழக்கத்தோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியது. இந்த இயக்கத்தை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக திரைக் கலைஞர்கள் ரஜினிகாந்த், கமல்ஹா சன், சரத்குமார், சத்யராஜ், விஜய் சேதுபதி, விஷால் யோகிபாபு, ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் எச்.வினோத், மாரி செல்வராஜ், ராஜுமுருகன், கரு.பழனியப்பன், மேனாள் நீதிபதிகள் சந்துரு, து.அரிபரந்தாமன், மதுரை ஆதீனம், தர்மபுர ஆதீனம், அமைச் சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள், காவல்துறையினர், வழக்கறிஞர் கள், எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர் கள் என ஏராளமானோர் கையெழுத் திட்டனர். போதைக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்கவும், அரசியல் நடவடிக்கைகள் முன்னெ டுக்கும் வகையில் இந்த இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிறைவு விழா மாநாடு ஞாயிறன்று (ஜூலை 16) மாலை 3 மணி அளவில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், போதைக்கு எதிரான பொதுப் பிரகடனத்தை சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட, ஜோதிமணி எம்.பி., பெற்றுக் கொள்கிறார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவள வன் எம்.பி., வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.எ.ரஹீம் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ .ராதா கிருஷ்ணன், சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் கே.எஸ்.பாரதி, வரவேற்புக் குழு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் எல்.பி.சரவணதமிழன், பொருளாளர் தீ.சந்துரு உள்ளிட்டு திரை பிரபலங்கள், சமூக செயற் பாட்டாளர்கள், பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.