சென்னை, நவ.3- வீட்டிலும் சமூகத்திலும் பிள்ளை களை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் , கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த யுவராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவனின் தலைமுடியை வெட்டி யும், கால்சட்டையை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்திய தால்தான், தன் மகன் தற்கொலை செய்து கொண்டான். எனவே, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தர விடக் கோரி மாணவனின் தாய் கலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவர்கள் ஒழுக் கத்தை கடைப்பிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்டார். இந்த தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி 45 விழுக்காட்டிலிருந்து 90 ஆக உயர்ந்தது. இந்த புகார் குறித்து மாவட்ட தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், பெற்றோர் தரப்பு குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச் சாட்டில் உண்மை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைகூற முடியாது. பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பை யும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது அவர்களின் கடமை” என்று நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தி உள்ளார்.