states

img

காந்திகிராம பல்கலை.யில் சர்வதேச யோகா தினம்

காந்திகிராம பல்கலை.யில்  சர்வதேச யோகா தினம்  சின்னாளபட்டி, ஜூன் 21- திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக்கழகத்தில் உடற்கல்வி மற்றும் யோகா மையம் மற்றும் நாட்டு  நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) இணைந்து ஜூன் 21 அன்று  21.6.2022 அன்று 8 ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.  உடற்கல்வி இயக்குநர் டாக்டர் சி.சுகுமார் வரவேற்றார்.  காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  (பொறுப்பு)  டாக்டர் டி.டி.ரங்கநாதன் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, உரை யாற்றினார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு)  டாக்டர் ஜி.முரளி தரன் பங்கேற்பாளர்களை பாராட்டினார். நாட்டு நலப்பணித் திட்டம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.நாகமணி நன்றி கூறினார்.  காந்திகிராமத்தில் உள்ள பள்ளிகளிலிருந்து  மொத்தம் 638 மாண வர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

கஸ்தூர்பா சேவிகாஷ்ரம் சிறப்பு மேல்நிலைப் பள்ளி, காந்திகிராமம்; தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, சின்னாளபட்டி; தேவாங்கர் பாய்ஸ் மேல்நிலைப் பள்ளி, சின்னாள பட்டி; தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னாளபட்டி; சேரன்  வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சின்னாளபட்டி; இந்து உதவி பெறும் தொடக்கப்பள்ளி, சாமியார்பட்டி; மற்றும் காந்திகிராம கிரா மிய நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் யோகா செயல்விளக்கம் மற்றும் பயிற்சியில் பங்கேற்றது. உடற்கல்வி மற்றும் யோகா மைய ஊழி யர்கள், யோகா வல்லுநர்கள், நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பா ளர் மற்றும் திட்ட அலுவலர்கள், விளையாட்டு மற்றும் போட்டிகள் குழு  உறுப்பினர்கள் மற்றும் ஜிஆர்ஐ பணியாளர்களால் இந்த நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.இந்திய அரசின் ஆயுஷ்  அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொதுவான யோகா நெறிமுறை களின் பயிற்சியுடன் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. பங்  கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.