states

முதலமைச்சர் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை

சென்னை, ஏப். 18 - பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதன்பேரில் ஒரு கோடி ரூபாய்  மான நஷ்டஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி வி.சபரீசன், நக்கீரன் ஆசிரி யர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர்  அறிவழகன் ஆகியோர் எதிர் மனு தாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கிலிருந்து தனது பெயரை நீக்கக் கோரி சபரீசன் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி கடந்த மாதம்  தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சபரீசன் மேல்முறையீடு செய்தார். அந்த  வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்களன்று (ஏப்.18) விசாரித்தது. அப்போது சபரீசன் தரப்பில், கலைஞர் தொலைக்காட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதால் இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, வழக்கிலிருந்து தனது  பெயரை நீக்க வேண்டும். அதுவரை தனி  நீதிபதி முன்பான வழக்கின் விசார ணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று  வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதி  முன்பான மான நஷ்ட ஈடு வழக்கு விசார ணைக்கு இடைக்காலத் தடை விதித்த னர். மேல்முறையீடு வழக்கு விசார ணையை ஜூன் 10ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.