states

கொடைக்கானலில் ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்: விவசாயிகள் கவலை

கொடைக்கானல், அக்.27- கொடைக்கானல் அருகே, ஒற்றை யானை முகாமிட்டுப் பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளங்கி கோம்பை கிராமத்தில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை முகாமிட்டுப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் ஒற்றை யானை அப்பகுதியிலே முகாமிட்டிருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஒற்றைக் காட்டு யானையை, ஒலி எழுப்பி வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.