5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு: கேரள அமைச்சர்
பாலக்காடு, ஏப்.10- கேரளாவில் உள்ள அனைவருக்கும் ஐந் தாண்டுகளில் வீடு கிடைக்கும் என்று அமைச் சர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார். முழு மையான கல்வியறிவு போன்று முழுமை யான வீட்டு வசதி திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. மீண்டும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வர வேண்டும் என் பதே மக்களின் விருப்பம் என்றும் அமைச்சர் கூறினார். பாலக்காடு மாவட்டம் சித்தாலி புலிக் கால் இல்லத்தில் சுஜிதாவிடம் சிபிஎம் குழல் மந்தம்-2 லோக்கல் குழுவால் கட்டப்பட்ட வீட்டின் சாவியை எரவக்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வழங்கினார். சுஜிதாவின் கணவர் பிரகாஷ் நோய்வாய்ப் பட்டு இறந்தார். இரண்டு குழந்தைகளுடன் அவரது குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வந்தது. எட்டு லட்சம் ரூபாய் செலவில் 577 சதுர அடியில் வீடு கட்டப்பட்டது. பொதுக்கூட் டத்துக்கு கே.டி.பிரசேனன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கு அதிகாரம் அவசரகால நிலையை விட மோசமானது!
புதுதில்லி, ஏப்.10- தகவல் தொழில்நுட்ப விதிகளில் மேற்கொள்ளப்பட் டுள்ள திருத்தங்களுக்கு, தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. விதிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள திருத்தங்கள் மூலம் பத்திரிகை தகவல் அலுவலகத் திற்கு அளவிடமுடியாத அள விற்கு அதிகாரங்கள் அளிக்கப் பட்டிருப்பது, அதன் இயற்கைத் தன்மையையே மாற்றியமைத்தி டும் என்று தில்லி பத்திரிகையா ளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.கே. பாந்தே, செயலாளர் சுஜாதா மதோக் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: பத்திரிகை தகவல் அலுவல கத்தின் பங்களிப்பு என்பது, அர சாங்கத்திற்கும் ஊடகங்களுக் கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்படுவதாகும். ஒன் றிய அரசாங்கத்தின் கொள்கை கள் மற்றும் திட்டங்கள் குறித்து தகவல்களைப் பரப்புதல், ஊட கங்களுக்கு இது தொடர்பாக வசதி செய்து கொடுத்தல் மற்றும் அங்கீகாரம் அளித்தல் என்பவை களாகும் என்று பத்திரிகை தக வல் அலுவலகத்தின் இணைய தளத்தில் அதன் பங்கு மற்றும் செயல்பாடுகள் என்னும் தலைப் பின்கீழ் குறிப்பிட்டிருக்கிறது. பொய் செய்திகளை அல்லது தவறான செய்திகளை அல்லது திசைதிருப்பும் விதத்தில் அமை யும் செய்திகளை (fake, or false, or misleading information) சரி பார்க்கிறோம் என்ற பெயரில் பத் திரிகை தகவல் அலுவலகத் திற்கு கட்டுப்பாடற்ற முறையில் ஒழுங்குமுறை அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பத்திரிகை தகவல் அலு வலகம் என்பது புதிய தணிக்கை துறையாக செயல்படும். இது, அவசரகாலத்தில் இருந்த மிக வும் ஆபத்தான நிலையை நினைவு கூர்கிறது. இன்னும் சொல்லப் போனால் அப்போதிருந்ததை விட மிகவும் மோசமானதாகும். இந்தத் திருத்தங்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக் களை வெளிப்படுத்தும் சுதந்தி ரம் ஆகியவற்றின் மீது மேற் கொள்ளப்பட்டுள்ள மற்றுமொரு அடக்குமுறை என்றே தில்லி பத்தி ரிகையாளர் சங்கம் கருதுகிறது. இந்தத் திருத்தங்கள் உடனடி யாக விலக்கிக்கொள்ளப்பட வேண் டும் என்று அது கோருகிறது. போலி செய்திகள் அச்சுறுத்தல் (on the menace of fake news) குறித்து அனைத்து ஊடகங்களு டனும் கலந்தாலோசனை செய் திட வேண்டும் என்றும் அது கோரு கிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)
திருத்தம்
நேற்றைய (10.04.2023) தீக்கதிர் மூன்றாம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள “டிஜிட்டல் யுகம் பொது மக்களை அதிகாரப்படுத்தவில்லை” என்ற செய்தியை தொகுத்தவர் பீட்டர் துரைராஜ் ஆவார். இச்செய்தி கட்டுரை அறம் இணைய இதழிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. செய்திக் கட்டுரையின் இறுதியில் இந்த விபரம் விடுபட்டுள்ளது.தவறுக்கு வருந்துகிறோம். - ஆசிரியர்
வெளிநடப்பு நாடகம் நடத்திய அதிமுக
சென்னை, ஏப்.10- தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து திமுக அரசுடனான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சில தினங்க ளுக்கு முன்பாக ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கா மல் நிலுவையில் வைத்திருந்தாலே அது நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம் என பேசியிருந்தது சர்ச்சை யானது. ஆளுநர் ரவியின் இந்த பேச்சுக்கும் செயல்பாட்டிற்கும் அரசி யல் கட்சிகள் பலதும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தநிலை யில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் கண்டிக்கும் வகையிலும் அவரது செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் திங்களன்று (ஏப்.10) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் வர இருப்பதை முன்னரே அறிந்த எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அணி ஓபிஎஸ்க்கு இருக்கை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பேரவை யில் இருந்து வெளிநடப்பு செய்து கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித் தது.
போக்சோ வழக்குகளை விசாரிக்க மேலும் 4 நீதிமன்றங்கள்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை,ஏப்.10- போக்சோ வழக்குகளை விரை வாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங் களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.10) சட்டம் மற்றும் நீதி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. அப்போது கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ரகுபதி, ‘குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங் கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தில் தற்போது 16 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவரு கின்றன. இந்நிலையில், போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி போக்சோ வழக்கு களை விரைவாக நடத்த திண்டுக்கல், தர்மபுரி, தேனி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.
“ஆளுநரின் செலவு கணக்கில் விதிமீறல்”- நிதியமைச்சர் குற்றச்சாட்டு
சென்னை,ஏப்.10- ஆளுநருக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.5 கோடியான பிறகு, தொடர்ந்து விதிமீறல் நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, ஒன்றிய அரசையும், குடியர சுத் தலைவரையும் வலியறுத்தும், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத் தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சி சட்ட மன்றகுழுத் தலைவர் செல்வப் பெருந்தகை எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஆளு நருக்கு செயலகம், வீட்டு செலவு உள்ளிட்ட 3 வகைகளில் அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளுநர் பொறுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது. 2 கோடியே 41 லட்சமாக இருந்த நிதி ஒதுக்கீடை, இந்த ஆண்டு 3 கோடியே 60 லட்சமாக முதலமைச்சர் உயர்த்தியிருக்கிறார். ஆளுநருக்கு ஒதுக்கப்படும் தொகை 5 கோடியான பிறகு, தொடர்ந்து விதிமீறல் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆளுநர் வீட்டு செலவு கணக்கில் ‘அட்சய பாத்திரா’ என்ற பெயரில் 5 கோடி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த 5 கோடி, அட்சய பாத்திரா திட்டத்திற்கு செல்லவில்லை. ஆளுநர் மாளிகைக்கு இதுவரை மொத்தமாக செலவிடப்பட்டிருப்பது
18 கோடி ரூபாய். அதில் 11 கோடி ரூபாய் எங்கே செலவிடப்பட்டது என்ற விவரம் அரசுக்கு தெரியாது. இதை தான் விதிமீறல் என்கிறேன். செப்டம் பர் 2021 வரைக்கும் எங்களுக்கு தெரிந்த அளவு இந்த நிதி எல்லாம் ஏதோ ஒரு நிறுவனத்திற்கு அனுப்பப் பட்ட நிதி என்பது தெரிய வருகிறது. பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா வில் ரூ.25 லட்சம், கேரளாவில் ரூ.25 லட்சம், மேற்கு வங்கத்தில் ரூ.25 லட்சம், உத்தரப் பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் ஆளுநருக்கு நிதியாக வழங்குகிறார்கள். பல்கலை மாணவர் கள் கூட்டத்திற்காக ரூ.5 லட்சம், தேநீர் விருந்துக்காக ரூ.30 லட்சம், ஊட்டியில் கலாச்சார நிகழ்ச்சிக்காக ரூ. லட்சம் என செப்டம்பர் 2021-க்கு பிறகு ஆளுநர் மாளிகை செலவு கணக்காக காட்டப்பட்டுள்ளது. ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும், ஒரே செலவுக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்ற நிதித்துறையின் விதியைமீறி, மாதம்தோறும் 58 ஆயிரம் வீதம், 6 மாதத்திற்கு 3 லட்சத்து 48 ஆயிரம் சென்றுள்ளது. ராஜ்பவனில் அனைத்து பணியாளர்களுக்கும் போனஸ் என்ற பெயரில் 11 லட்சம் மற்றும் 14 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறையின் விதிக்கு மாறாக, பல செலவுகளுக்கான நிதியை நிதித்துறை வழங்கியிருக்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கி றேன். விதிமுறை மீறல்கள் தடுக்கப் பட்டு இனிமேல் விதியில் இருக்கும் செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப் படும் என்ற விதிமுறையை கொண்டு வருவேன்” என்று தெரிவித்தார்.
குஜராத்தில் பவுத்தம் தழுவும் தலித்துக்கள்!
அகமதாபாத், ஏப். 10 - பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், தனது லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் ‘1956, அக்டோபர் 14’ அன்று, பவுத்த மதத்தைத் தழு வினார். இந்நிலையில் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர், இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்த மதத்தை தழுவுகின்றனர். காந்தி நகரில் ராமகதா மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. துங்கர்பூரில் இருந்து பழங்குடியின குடும்பங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள் வார்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 2006-இல் ராஜ்கோட்டில், ஒத்த எண்ணம் கொண்ட 50 தலித் சமூக செயற்பாட்டாளர்களால் நிறுவப்பட்ட தன்னார்வ அமைப்பான ‘ஸ்வயம் சைனிக் தளம்’ (SSD) இந்த மதமாற்ற விழாவை நடத்துகிறது. போர்பந்தரில் உள்ள கிரேட் அசோக புத்த விஹாரைச் சேர்ந்த புத்த பிட்சு ஷு பிரக்யா ரத்னா விழாவிற்கு தலைமை தாங்கி, தீக்ஷாவை வழங்க உள்ளார். 2028-ஆம் ஆண்டுக்குள் தலித் சமூகங்களைச் சேர்ந்த 1 கோடி பேர் புத்த மதத்தைத் தழுவுவார்கள் என்று ‘ஸ்வயம் சைனிக் தளம்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ‘ஸ்வயம் சைனிக் தளம்’ அமைப்பின் பிரதிநிதியான ரமேஷ் பாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மேலும் கூறியிருப்பதாவது: பவுத்தம் தழுவும் நிகழ்வுக்காக, ஏற்கெனவே அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலு வலகங்களில் சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பங் களை அளித்துள்ளனர். இந்த விண்ணப்ப தாரர்கள், பேராசை, மயக்கம் அல்லது அச்சுறுத் தல் இன்றி மதமாற்றத்தைத் தன்னார்வமாக தேர்வு செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த, போலீஸ் சரிபார்ப்புச் செயல்முறை தற்போது நடந்து வருகிறது. ஏனெனில், மதமாற்ற செயல் முறையானது மாநில அரசிதழில் விவரங்களை வெளியிடுவதை உள்ளடக்கியது ஆகும். பவுத்த மதத்திற்கு மாறுவதற்கான இந்த முடிவு, சனாதன தர்மத்தின் சாதி அடிப்படை யிலான பாகுபாட்டின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள தலித் சமூகத்தின் தன்னார்வ நடவடிக்கை யாகும். சாதி அமைப்பை நிராகரிப்பதற்காக இந்து மதத்தைத் துறந்து பவுத்தத்தைத் தழுவிய பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சரணடைந்த சொந்த வீரர்களைக் கொன்றது உக்ரைன்
மாஸ்கோ, ஏப்.10- ரஷ்யாவிடம் சரணடைந்த தனது நாட்டு வீரர்களை உக்ரைன் ராணுவம் குண்டுகளை வீசிக் கொலை செய்த அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி யுள்ளன. உக்ரைன் மீதான போரில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. சில பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசம் வந்துள்ளன. அமெரிக்காவும், ஒட்டு மொத்த ஐரோப்பாவும் ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஆயுதங்கள் தேவை என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோரி வரு கிறார். அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய இந்த நாடுகள் தயார் நிலையில் உள்ளன. தங்கள் நாடுகளில் நிலவும் நெருக்கடி களை மீறியும், மக்களின் எதிர்ப்புகளை மீறியும் ஐரோப்பிய வலதுசாரி அரசுகள் போரைத் தொடர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைனின் அவ்டீவ்கா நகருக்கு அருகில் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டது. ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படையினர் பின்வாங்கினர். ரஷ்யப்படைகள் விடவில்லை. சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதால் வேறு வழியின்றி, 14 உக்ரைன் படை வீரர்கள் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இரவு நேரமானதால் அவர்களை ஒரு பதுங்குகுழியில் தங்க வைத்தனர். மறுநாள் காலையில் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டிருந்தனர். ஆனால், இரவு நேரத்தில் உக்ரைன் ராணுவம் இந்தப் பதுங்குகுழியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. குண்டு மழை பொழிந்தனர். அவர்களின் இலக்கு சரணடைந்த தங்கள் வீரர்களைக் கொல்வதிலேயே இருந்தது. அந்த இடத்திற்கு அருகில் வேறு வழியில் ஊடுரு வதைப் போன்றதொரு வேலையைச் செய்து, இங்கிருந்த ரஷ்ய வீரர்களைத் திசைதிருப்பினர். சரணடைந்த தங்கள் வீரர்கள் 14 பேரையும் கொன்றுவிட்டே அந்த இடத்தை விட்டு உக்ரைன் வீரர்கள் திரும்பினர்.