states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கோவாவில் விடுமுறை

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மே 10 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக கோவா பாஜக அரசு அறிவித்துள்ளது. இது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி  இருக்கிறது. “பாஜக தலைமையிலான கோவா அரசு, தனது தலைமையை மகிழ்விப்பதற்காக கீழ்த்தரமான நிலைக்கு இறங்கியிருக்கிறது” என்று அரசியல் கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளன. இது அபத்தமான முடிவு என்றும், விடுமுறைக்கு எதிராக சட்டப்பூர்வ உதவியை நாட  வேண்டியிருக்கும் என்று கோவா மாநில தொழில்கள் சங்கத் தலைவர் தாமோதர் கோச்கர் அதிருப்தி யை வெளியிட்டுள்ளார்.

‘பாஜகவின் வீழ்ச்சி கர்நாடகத்திலிருந்து துவங்கினால் மகிழ்ச்சி’

“கர்நாடகாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு எனது ஒரே வேண்டுகோள். ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு வாக்களியுங்கள். தயவு செய்து பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் ஆபத்தானவர்கள்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். “எவ்வளவு சீக்கிரம் பாஜக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறதோ அது நாட்டுக்கு நல்லது. பாஜக-வின் வீழ்ச்சி கர்நாடகாவில் இருந்து தொடங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். இந்து மதத்தில் உள்ள ஆன்மீகத்தை பாஜக அழித்துவிட்டது” என்றும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி.யில் ‘தி கேரளா ஸ்டோரி’க்கு வரிவிலக்கு: ஆதித்யநாத்

இஸ்லாமிய சமூகத்தினரையே இழிவுபடுத்தும் வகையில், சுதிப்தோ சென் இயக்கியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பாஜக  ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது ஆதித்யநாத் தலைமை யிலான உ.பி. மாநில பாஜக அரசும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு அறி வித்துள்ளது. மேலும், முதல்வர் ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து இந்த திரைப்படத்தை பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக - காங்கிரஸ் இடையே புரிந்துணர்வு: குமாரசாமி

“காங்கிரஸ் கட்சி முஸ்லிம் சமூகத்தை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது. அவர்களின் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. தீவிர இந்து தலை வர்களை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பாஜக-வுடன் காங்கிரஸ் கட்சிக்கு புரிந்துணர்வு உள்ளது.  இரு தேசிய கட்சிகளும் (பாஜக மற்றும் காங்கிரஸ்) தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இளை ஞர்களை தேவையில்லாமல் பயன்படுத்திக் கொள்கின்றன. பாஜக அரசு தேர்தலை முன்னிட்டு சமூகத்தின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு பில்லவா வளர்ச்சி கழகத்தை அறிவித்துள்ளது” என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் மத முழக்கம் ஆபத்தானது: சரத்பவார்

“மதச்சார்பற்று நடந்து கொள்வோம் என்றும் ஜனநாயக மாண்புகளைக் காப்போம் என்றும்  தான் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படும் அனைவரும் உறுதிமொழி ஏற்கிறோம்.  இந்நிலையில், கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மதரீதியிலான (‘ஜெய்  பஜ்ரங்பலி’)முழக்கத்தை எழுப்பியது வியப்பை அளிக்கிறது. மதச்சார்பற்று நடந்து கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டு, தேர்தலின்போது மதம் சார்ந்தோ, மதரீதியிலான விஷ யத்தையோ பேசி வாக்குச் சேகரிப்பது சரியானதல்ல. இது சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் விஷயம்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திராவும், ராஜீவும் இந்தியாவுக்காக ரத்தம் சிந்தினார்கள்: கபில்சிபல்

“இந்த தேர்தலில் காங்கிரசின் அரச குடும்பம் கர்நாடகாவுக்கு வந்து, அவர்கள் கர்நாட கத்தின் இறையாண்மையை பாதுகாக்க விரும்புவதாக கூறியுள்ளது. ஒரு நாடு சுதந்திர மாக இருந்தால் அந்த நாடு இறையாண்மை கொண்ட நாடு என்று அழைக்கப்படுகிறது. அந்த  வகையில், இந்தியாவில் இருந்து கர்நாடகம் தனியானது என்று காங்கிரஸ் நம்புகிறது. இந்தியாவிலி ருந்து கர்நாடகம் பிரிந்து போக வேண்டும் என்று விரும்புகிறது” என்று பிரதமர் மோடி பேசி யிருந்தார். இந்நிலையில், “மோடிஜி அவர்களே, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இந்தியா வுக்காக இரத்தம் சிந்தியதை தேசம் கண்டது” என்றும், “தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களில் இருந்து உண்மைகளை அழித்து விடலாம் என்று  நினைக்கிறீர்களா..?” என்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் டுவிட்டரில் பதில ளித்துள்ளார்.

முஸ்லிம்கள் வெற்றிபெற முடியாது என்பதால் சீட் தரவில்லையாம்..

“கர்நாடகத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். எங்கள் கட்சி 130 முதல் 135 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.  வருணா தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைவார். அங்கு எங்கள் கட்சியின் வேட்பாளர் சோமண்ணா வெற்றி பெறுவது உறுதி. ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முஸ்லிம்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு குறைவாக இருப்பதால் அந்த சமூ கத்திற்கு நாங்கள் டிக்கெட் வழங்கவில்லை. வரும் காலத்தில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முஸ்லிம் சமூகத்தினருக்கு டிக்கெட் வழங்கப்படும்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடி யூரப்பா கூறியுள்ளார்.

பாஜகவினர் வீதிவீதியாக மோடியை அலைய வைத்துவிட்டனர்

“பாஜகவினர் மக்களை மிரட்டி வாக்கு பெற முயற்சி செய்கிறார்கள். பாஜக-வுக்கு வாக்க ளிக்காவிட்டால், திட்டங்களை ஒதுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இந்த நாடு  கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. பாஜக-வின் மிரட்டலுக்கு கன்ன டர்கள் பயப்பட மாட்டார்கள். வருகிற 13-ஆம் தேதி நீங்கள் தேர்தல் முடிவை பாருங்கள். 15-ஆம்  தேதி காங்கிரஸ் ஆட்சி அமையும். இங்குள்ள பாஜக-வினர் சரியான முறையில் ஆட்சி நடத்த முடி யாமல், பாவம் பிரதமர் மோடியை வீதி வீதியாக அலைய விட்டனர்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.

அமைச்சரவை மாற்றமா? துரைமுருகன் பேட்டி

சென்னை, மே 9- தமிழ்நாடு அமைச்சரவை மாற்றங் களைப் பற்றி “யாமறியோம் பராபரமே” என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த அமைச்சர் துரை முருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளி யானது. இதனையடுத்து, அமைச்சர் துரைமுருகனை சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, “ஆளுநர் மாளிகைக்குச் சென்றால் சொல்லிவிட்டுத்தான் செல்வேன். அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்குத் தெரியாது. அமைச் சரவை மாற்றங்களை பற்றி யாமறி யோம் பராபரமே என்றார்.  தனக்குக்கீழே பணி செய்வோரை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிக்க  முதல்வருக்கு அதிகாரம் உண்டு.  ஆனால் அமைச்சரவை மாற்றத்திற் கான தேவை இருக்கிறதா என முதல்வர்  தான் தீர்மானிக்க வேண்டும். எந்த அமைச்சரும் தங்களது பொறுப்பு மாற்றப்படுமா என பதற்றத்தில் இல்லை” என்றார்.

வங்கிக் கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

சென்னை, மே 9- ஆன்லைன் மூலமாக பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டும் கும்பல் தொடர்ந்து  கைவரிசை காட்டிக் கொண்டே இருக்கிறது.  அந்த வகையில் கடந்த ஓராண்டில் நூதன முறையில் பொது மக்களின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 288.38  கோடி திருடப்பட்டுள்ளதாக சைபர்  கிரைம் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இது கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக  பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. அதன்படி ஒரு வருடத்தில் ரூ.288 கோடிக்கும் அதிக மான பணம் பொது மக்களின் வங்கி  கணக்கில் இருந்து சுருட்டப்பட்டிருக் கிறது. பொது மக்களின் புகாரின் அடிப்படையில் 106 கோடி ரூபாய்  முடக்கப்பட்டுள்ளது. ரூ.27 கோடி  உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. ரூ.67 கோடி ரூபாய் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.6  கோடி பணம் 3 மாதத்தில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது. இதன்படி 27 ஆயிரத்து 905 சிம் கார்டுகள் தடைசெய்ய ஒன்றிய  அரசால் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 240 சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை  கண்டு கொள்ளாமல் கவனமாக இருக்கவேண்டும்.  இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு சாதி, இருப்பிட, வருமான சான்று துரிதமாக வழங்க அரசு  உத்தரவு

சென்னை, மே 9- உயர்கல்வியை தொடர் வதற்கு ஏதுவாக மாண வர்களுக்கு வருவாய்த் துறையின் மூலமாக வழங் கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  ராமச்சந்திரன் அறிவுறுத்தி யுள்ளார்.  இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை யில், “இச்சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவர்கள் இணைய வழி யாக விண்ணப்பம் செய்து  உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் எவ்வித காலதாமதம் செய்ய க்கூடாது” என்று அதிகாரி களுக்கு அறிவுறுத்தி யுள்ளார்.

ஜிப்மர் சேவைக்கு கட்டண வசூல்:  ஜிப்மர் பாதுகாப்புக்குழு  கண்டனம்

புதுச்சேரி,மே.9- ஜிப்மர் சேவை கட்டண  வசூலுக்கு ஜிப்மர் பாதுகாப்புக் குழு  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  ஜிப்மர் பாது காப்புக்குழு தலைவர் தா.முரு கன் வெளியிட்டுள்ள  செய்தியில் கூறியிருப்பதாவது:-  தன்வந்திரி மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு பிரஞ்சுகாரர் களின் ஆட்சிக் காலத்தில்  புதுச்சேரியில் ஆரம்பிக்கப் பட்டது. புதுச்சேரி மாநிலம், பிரஞ் சுகாரர்களின் காலனி ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெற்று, இந்திய  அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்ட பிறகு, 1964 ஆம் ஆண்டு “ஜவகர்லால் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவ மனையாக அப்போதைய பாரத  பிரதமர்  ஜவகர்லால் நேருவால் கட்டமைக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனை புதுச் சேரி மக்களுக்கு மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை இலவச மாக அளிக்கக்கூடிய மருத்துவ மனையாக  விளங்கி வருகின் றது.

 ஜிப்மர் மருத்துவமனையை கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னாட்சி யாக மாறுவதை எதிர்த்து, அந்த  காலகட்டத்தில் ஒத்தக்கருத்து டைய அனைத்து கட்சிகளும், விடு தலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட  ஜிப்மர் பாதுகாப்புக் குழு என்கிற  பொது அமைப்பின் மூலமாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய மக்கள் போராட் டங்களை நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரக்கூடிய உரி மைகளை சட்டப்பூர்வமாக பெற்றது.  அதன்படி  ஏழை,எளிய மக்க ளுக்கு மற்ற ஒன்றிய அரசு மருத்து வமனையில் வழங்கப்படுவது போல இலவச மருத்துவம் வழங் கப்பட வேண்டும்.  இளநிலை மருத்துவப்படிப்பில், மொத்தம் உள்ள இடங்களில் 25 விழுக்காடு புதுச்சேரியை சார்ந்த ஏழை-எளிய  நன்கு படிக்கக்கூடிய மாணவர்க ளுக்கு மருத்துவ இடங்கள் வழங்க  வேண்டும்.  இளநிலை மருத்துவ படிப்புக் கான கட்டணம் மிகக்குறைந்த அள வில் வசூலிக்கப்பட வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு கண்டனம் ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சியாக மாற்றம் பெற்ற பிறகு, தன்னுடைய உயரிய நோக்கமான அனைத்து தரப்பு  மக்களுக்கும் இலவச மருத்துவ சேவை என்கிற நிலை மாறி, ஏழை  எளிய மக்களின் உயிரினை வாட்டி,  வதைத்து பணம் பறிக்கின்ற செயலில் முழுமூச்சாக இறங்கி யுள்ளது. இதனை கண்டித்து விடு தலை சிறுத்தைகள் கட்சி அண்மை யில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை விமர்சித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை  சவுந்தரராஜனுக்கு ஜிப்மர் பாது காப்புக்குழு வன்மையாக கண்ட னம் தெரிவிக்கிறது. புதுச்சேரி  ஜிப்மர் மக்களின் சொத்து. அதை தனியாருக்கு தாரைவார்க்க  ஒருபோதும் அனுமதிக்கமுடி யாது. சுகாதார சேவை அனை வரின் உரிமை,ஜிப்மரை காப்பாற்றி அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற நிலையை ஒன்றிணைந்து மீட்டெடுக்க போராடுவோம். இவ்வாறு அவர் வெளியிட் டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.


அடுத்த குடியரசு நாங்களாக இருப்போம் பெலிஸ் அறிவிப்பு

பெல்மோபன், மே 9- பிரிட்டனின் மன்னரைத் தங்கள் அடையாளப்பூர்வமான தலைவராக ஏற்றுக் கொள்ளும் நாடுகளில், குடியரசாக அறிவித்துக் கொள்ளப் போகும் அடுத்த நாடாகத் தாங்கள்தான் இருப்போம் என்று  பெலிஸ் நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். மக்களை அடிமைகளாக்கி, அவர்களை  விற்று அதைப் பெரும் வியாபாரமாக்கிய ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரிட்டன்,  மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. கரீபிய  நாடுகளில் இதற்கான ஆதரவும் பெரு கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலை வர்கள் மீது அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. தங்கள் நாடுகளை குடியரசு நாடுகளாக மாற்றுவோம் என்ற வாக்குறுதியை அவர்கள் தந்து வருகிறார்கள். பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் தேர்வு செய்யப்பட்டபோது பெலிஸ் உள்ளிட்ட  சில நாடுகள், மனிதர்களை அடிமைகளாக விற்றதற்கு பிரிட்டன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், அவ்வாறு மன்னிப்புக்கோர சுனாக் மறுத்து விட்டார். இதைக் கடுமையான விமர்சனம் செய்துள்ள பெலிஸ் பிரதமர் ஜானி பிரிசெனோ, “பிரிட்டனுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. மன்னிப்பு என்பது மிகவும் குறைந்தபட்ச கோரிக்கையாக நாங்கள் வைக்கிறோம்” என்றார். தற்போது பிரிட்டன் மன்னரைத் தங்கள் தலைவராகவும் ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளில், குடியரசாக அடுத்து அறிவித்துக் கொள்ளப்போவது பெலிஸ் ஆக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜமைக்காவின் அமைச்சரும் இதை முன்னிறுத்திப் பேசியதோடு, அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம் என்றும் கூறியிருந்தார். மேலும் சில நாடுகளும் இந்தப் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அடையாள அட்டையை  சரிபார்க்கும் உரிமை தனியாருக்கா?

பொதுமக்கள் கருத்துக் கூறுமாறு அழைப்பு

புதுதில்லி, மே 9 - ஆதார் அடையாள அட்டையை சரி பார்க்கும் உரிமையை தனியாருக்கு வழங்க, ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் கருத்துக் தெரிவிக்கலாம் என்று ஒன்றிய அரசு ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், அதற்கான கால அவ காசத்தை மே 20 வரை நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களின் விப ரங்களை தெரிந்துகொள்ள ஆதார் அடை யாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இத னிடையே, ஆதார் அடையாள அட்டை யை சரிபார்க்கும் உரிமையை தனியா ருக்கு வழங்க ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது முடிவு செய்தது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமையை தனி யாருக்கு வழங்கினால் அது தவறுகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என அவர்கள் வலி யுறுத்தினர். இதையடுத்து, ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, தங்களது முடிவின் மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு கூறியிருந்தது. இதற்கு கடந்த 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து மே 20-ஆம்  தேதி வரை புதிய அவகாசம் வழங்கி யுள்ளது. ஆதார் அடையாள அட்டை விபரங்களை தனியாரும் சரிபார்க்க அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றிய கருத்துக்களை மே 20-ஆம் தேதி வரை பொதுமக்கள் தொடர்ந்து தெரிவிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.