states

கடும் வெயில்: பழங்கள் விலை அதிகரிப்பு

சென்னை, மே 2- கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையில் அதிகப்படியான தேவையின் காரண மாக பழங்களின் விலை அதிகரித் துள்ளது. ஆரஞ்சு, சாத்துக்குடி, பப் பாளி, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை அதிகரித்து விற்கப் படுகிறது. ஒரு கிலோ மாதுளை ஒரு வாரத் திற்கு முன்பு கிலோவிற்கு 200 ரூபாய்  விற்கப்பட்ட நிலையில் தற்போது  அதன் விலை 350 என அதிகரித் துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு  சாத்துக்குடியின் விலை 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 80  ரூபாய் என அதிகரித்து விற்கப்படுகிறது. அதேபோல திராட்சை, பப்பாளி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலை கிலோவிற்கு 20 முதல் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பழங்களின் வரத்து குறைவாக இருப்பதும், கோடைகாலம் என்பதால் பழங்களின் தேவை அதிகமாக இரு பதும் விலை ஏற்றத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் உதகையில் இந்த முறை பிளம்ஸ் பழம் உற்பத்தி குறைந் துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ. 240 முதல் 260 வரை  விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள், பல்வேறு பழங்கள் உற்பத்தி செய்யப் படுகிறது. குறிப்பாக, இங்கு பேரிக் காய், கமலா ஆரஞ்சு, பிளம்ஸ் மற்றும் பீச்சீஸ் பழங்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது குரங் குகள் மற்றும் கரடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் இருந்த பழ மரங்கள் அகற்ற ப்பட்டுள்ளன.

ஒரு சில பகுதிகளில் மட்டுமே இப்பழங்கள் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன. இந்த பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்காது. அனைத்துமே ஒரு குறிப்பிட்ட சீசன் களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் மார்ச் மாதம் முதல்  மே மாதம் வரை விளையும். பொதுவாக இந்த பழங்கள் அதிகளவு விற்பனைக்கு வந்தால், கிலோ  ஒன்று ரூ. 50 முதல் 100 வரை விற்பனை யாகும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகம் வாங்கிச் செல்வர். ஆனால், இம்முறை பிளம்ஸ் பழங்கள் மகசூல் மிகவும் குறைந்துள்ளது. மேலும், மார்ச் மாதம் முதல் விளைய வேண்டிய இந்த  பழங்கள் தற்போதே சில இடங்களில் விளைந்துள்ளன. இதனால் சந்தைக்கு குறைந்த ளவே பிளம்ஸ் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற் போது, நீலகிரியில் உள்ள  மார்க்கெட் களில் கிலோ ரூ. 240 முதல் 260 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்கள்  மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை வாங்குவதை தவிர்த்து வரு கின்றனர். மகசூல் அதிகரித்தாலே பிளம்ஸ் பழங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள்  தெரி விக்கின்றனர்.