சென்னை, ஆக.17- அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களுக்கு 2-வது கட்ட மாக வருகிற 22 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 24 ஆம் தேதி தொடங்கியது. பொது மருத்து வம், பல் மருத்துவ இடங்கள் மாணவர்க ளின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் நிரப்பப்பட்டன. இவற்றில் எம்பிபிஎஸ் 6326 இடங் கள், 1768 பிடிஎஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11ஆம் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14 ஆம் தேதி மாலைக்குள் கல்லூரிக ளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி பெரும்பாலான மாண வர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்ட னர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவர்களின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல் வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்த வர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக இந்த இடத்தை நிரா கரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அது தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20 ஆம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு ஆக.18 அன்று வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழ்நாட்டில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது. இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.