சென்னை,ஜன.18- தமிழ்நாடு ஆளுநர் ரவி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசும் போது தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாக மாறுகின்றன. ஜனவரி 4 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பேசும்போது, “தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்பதுதான் பொருத்தமானது” என்று பேசியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை கள் வெளியிட்டன. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் ஜன. 9 அன்று சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கி யிருந்த அந்த உரையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். குறிப்பாக தமிழ்நாடு, திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு போன்ற பத்தி களையும் அண்ணா, பெரியார், அம்பே த்கர், கலைஞர் என்று குறிப்பிட்டிருந்த பெயர்களையும் அவர் வாசிக்காமல் கடந்து சென்றார். மேலும் ஆளுநர் உரையில் சில புதிய கருத்துக்களை சேர்த்தார். இது திமுக தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநர் செயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உடனடியாக பதில் அளிக்கும் வகையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன் மூலம், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரை தான் பேரவை குறிப்பு களில் இடம்பெறும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆர்.என்.ரவி பாதியிலேயே புறப்பட்டு சென்று விட்டார். ஆளுநரின் இந்த நடவடிக் கைக்கு திமுக.வும், கூட்டணி கட்சி களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்தை கொண்டு வந்த போது முதன் முறையாக ஆளுநர் உரைக்கு வருத்தமும் தெரிவிக்கப் பட்டது. மேலும், ஜனவரி 12 அன்று சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர் தில்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை கொடுத்தனர். கடிதத்தை பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு அதை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஜன.13 அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லி சென்றார். அவர் சென்னை திரும்பி னார். இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று பேசியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023 ஜனவரி 4 அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறை வடைந்த ‘காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பை கொண்டாடும் ‘ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் குழலில், ‘தமிழகம்’ என்பதை மிகவும் பொருத்த மான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற் கான பரிந்துரைபோல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளு நர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவ தற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜன.13 அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல்விழா அழைப்பிதழில், திருவள்ளுவர் ஆண்டு விடுப்பட்டது குறித்தும் நமது அரசியல் சாசனம் சட்டப்படி வகுத்துக்கொடுத்துள்ள அட்டவணை பட்டியலில் தமிழகம் என்று ஒரு மாநிலமே இடம்பெற வில்லை. ஆனால், அரசியல் சாசனப் படி நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆளுநர், அரசியல் சாசனத்தின்படி உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலம் என்பதை தவிர்த்து தமிழகம் என்று அச்சடித்து கொடுத்தார். இந்த சர்ச்சை களுக்கு அதில் விளக்கம் இல்லை.