states

ஆளுநர் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிடலாமா?

புதுக்கோட்டை, ஜூலை 7 - பொறுப்பான பதவியில் இருக்கும் ஆளுநர் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட லாமா? என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.  புதுக்கோட்டையில் வியாழக் கிழமை இரவு அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:  முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகி யோர் மீது சிபிஐ வழக்கு தொடர்வது குறித்து அனுமதி கோரும் கோப்பு கள் கடந்த 2022 செப்.12 ஆம் தேதி  அரசிடமிருந்து அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றன. இதற்கு, ‘சட்டப்படி யான விசாரணை’ நடைபெற்று வருவ தாக மழுப்பலான பதிலை ஆளுநர் கூறியிருக்கிறார். யார் விசாரணை நடத்துகிறார்கள் என்பதை விளக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் கே.சி.வீர மணி மீது வழக்கு தொடர்வதற்காக முழுமையான கோப்புகள் ஆளுநருக்கு கடந்த 2022 செப்.12 ஆம் தேதி அனுப்பியிருக்கிறோம். ஆனால், ‘ஆதன்டிகேட்டட் காப்பீஸ்’ வரவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கிறது. முழுக் கோப்புகளும் அவரிடம் இருக்கிறது.  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற் காக கடந்த 2022 மே 15 ஆம் தேதி  அரசிடமிருந்து கோப்புகள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதுவும் வரவில்லை என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஏன் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக செய்திக்குறிப்பை வெளி யிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துகளை ஆளுநர் மாளிகை வெளியிட்டால், பொதுமக்கள் இனி ஆளுநர் மாளிகை அறிவிப்புகளை நம்புவார்களா? வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து தற்போது  எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று வழக்கு தொடர்வதற்கான முன்மொழிவுகளை தலைமைக் குற்றவியல் வழக்குரைஞரிடம் பெற்று மேற்கொள்ள இருக்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றும் வகை யிலும், திமுக அரசைப் பழிவாங்கும் வகையிலும் இரட்டை வேடம் போடு கிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த நட வடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டா லின் அஞ்சமாட்டார். பழிவாங்கவும் விடமாட்டார். ஆளுநர் அரசியல் செய்யக் கூடாது எனப் பலரும் சொல்கிறார்கள். அவற்றைக் கேட்டு அவர் திருந்த வேண்டும். இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வரவில்லை. பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட குறிப்புதான் கிடைத்திருக்கிறது. எனவே, முதல்வரின் ஆலோசனை பெற்று, பதிலை கடிதமாகக் கொடுப்பதா? அல்லது பத்திரிகைக் குறிப்பாக அளிப்பதா? என்பதை விரைவில் முடிவு செய்வோம். 

;