states

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைகோரி ஆளுநர் சந்திப்பு இயக்கம்

சென்னை,ஜன.30- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு அரசு  கொண்டுவந்திருக்கும் மசோதா விற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி மாநிலம் முழு வதும் மக்களிடம் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களுடன் புதனன்று(பிப்.1) ஆளுநரை சந்திக்கும் இயக்கத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்துகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண் டினா, பொதுச் செயலாளர் ஏ.ராதிகா ஆகியோர் விடுத்திருக் கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வ தற்கு 2022 ஏப்ரல் 26 அன்று அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்தது. அதை அரசிதழிலும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. 17.12.22 அன்று சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப் பப்பட்டுள்ளது. 45 நாட்களை கடந்த பிறகும் கூட அதில் கையெ ழுத்திடாமல் ஆளுநர் காலதா மதம் செய்வது பொருத்தமற்றது.

தமிழக  மக்களை சீரழிக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடுப்பது அவசர தேவையாகும். ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்தால் ஏரா ளமான குடும்பங்கள் பாதிக்கும். பணத்தை இழந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தற்கொலை செய்து கொள் ளும் ஆபத்தும் அதிகரித்துள்ளது.  கடந்த 15 மாதங்களில் 60  பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.  ஆன்லைன் சூதாட்டத்தில் மக்களை இழுப்பதற்கான நடவடிக்கைகளையும் சூதாட்ட நிறுவனங்கள் இணைய இணைப் புகளை பொதுமக்களின் செல் பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வருகிறது. இதுவரை விளம்பரங்களில் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தற்போது பெண்களையும் இந்த  விளம்பரங்களில் இணைத்து  வெளியிடுவது வேதனைய ளிக்கிறது.  மேலும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இளை ஞர்கள், நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து விளம்பரங்கள் மூலம்  ஆசையை காட்டி, ஆர்வத்தை  தூண்டி கவரும் வகையில்  வெளியிடுவது கவலையளிக்கி றது.

முதலில் தோல்வி அடை வதைப் போல் காட்டினாலும், தோல்வியில் இருக்கக்கூடிய ஒரு வருக்கு  போனஸ் போன்ற ஊக்கத்தை கொடுத்து மீண்டும்  விளையாட வைக்கும் செயல் களை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் செய்து வருகிறது. இந்த மோகத்தால் பணத்தை இழந்து மனவேதனையில் தற் கொலைக்கு செல்லும் ஆபத்தும் உள்ளத்தால் ஆன்லைன்  சூதாட்டத்திற்கு  எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்த சீர்கேட்டை களைவ தற்கான முயற்சியை உடனடி யாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்பதை உணர்ந்த  தமிழ்நாடு அரசு, அமைச்சர வையிலும் சட்டமன்றத்திலும் கொண்டு வந்த தடை சட்ட மசோதா வுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமையாகும்.  தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான குடும்பங்கள் இளைஞர்கள் இச்சூதாட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டு சீரழியும் நிலையி லிருந்து பாதுகாப்பது என்பது அவசியமானது மட்டுமல்ல அவசரமான தேவையும் கூட.  எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை  சட்டத்திற்கு ஆளுநர் உடனடி யாக ஒப்புதல் அளிக்க வலி யுறுத்தி மாநில முழுவதும்  41  மாவட்டங்களில் ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட மக்களை சந்தித்து பெற்றுள்ள கையெழுத்துகளை பிப். 1அன்று சென்னை கிண்டி யிலுள்ள மாளிகைக்கு சென்று ஆளுநரிடம் ஒப்படைக்கும் இயக்கத்தை  நடத்துகிறது.  இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள்.