states

மக்கள் தொகை, இடஒதுக்கீடு அளவு, வருமான வரம்பு சிபாரிசுக்காக ஆணையம் அமைத்துச் செயல்படுக!

சென்னை, நவ.12- தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகை யை கணக்கீடு செய்வதற்கும் அவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளிக்க வேண்டிய இடஒதுக்கீடு அளவினை தீர்மா னிக்கவும் இச்சலுகை பெறுவதற்கான வரு மான வரம்பை சிபாரிசு செய்வதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டுமெனவும் அந்த ஆணையத்தின் சிபாரிசுகள் அடிப்படை யில் செயல்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக சனியன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாகை மாலி,  எம்.சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் பேசிய நாகைமாலி  சிபிஐ(எம்) சார்பில் முன்வைத்த கருத்து: இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொரு ளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சத விகித இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்படும் சட்டமன்ற அனைத்  துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் கீழ்க்  கண்ட கருத்துக்களை பதிவு செய்கிறோம்

சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும்

நால்வர்ண முறைப்படி அமைந்துள்ள ஏற்றத்தாழ்வான சாதிய சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்ட பட்டியலின, பழங்குடி மற்றும்  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்கும் சமூக நீதி கோட்பாடு நீண்ட நெடுங்  காலமாக அமலாக்கப்பட்டு வருகிறது. தமி ழகத்தில் சமூக நீதி என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கோட்பாடு நூறாண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாதிய ஏற்றத் தாழ்வுகள் நீடிக்கும் வரை சமூக  அடிப்படையிலான இடஒதுக்கீடு கோட்பாடு நீடிக்க வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வருகிறது.

சமூக அடிப்படையில் வழங்கப்படும் கோட்  பாட்டை ரத்து செய்து விட்டு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பலரால் நாட்டின் பல பகுதியில் எழுப்பப்பட்ட போது மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தி லும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் இதனை எதிர்த்து குரல்கொடுத்ததோடு சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு  பாது காக்கப்பட வேண்டுமென வற்புறுத்தி வரு கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பல அளவீடுகளில் அமலாக்கப் பட்டு வருகிறது. தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 95 சதமான மக்கள் இடஒதுக்கீடு வரம்பிற்குள்  கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனால், பல  மாநிலங்களில் 50 முதல் 70 சதவிகித மக்களே  இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப் பட்டுள்ளனர். மீதமுள்ள குறிப்பிட்ட சதமான மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையே தொடர்ந்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டுமென நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப் பான போராட்டங்கள் வெடித்த சூழ்நிலை யில் உழைப்பாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையில் இதுவரையில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரில் ஏழைகளுக்கு குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1990ஆம் ஆண்டு முதல்  கோரி வந்துள்ளது. அதேசமயம், முன்னேறிய பிரிவினருக்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக வலியுறுத்தி யுள்ளது.

ஏழைகளுக்கு வஞ்சகம்

பொருளாதாரத்தில் நலிந்த இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதமானம் வரை இடஒதுக்கீடு வழங்கும் 103ஆவது சட்டத் திருத்தத்தினை ஒன்றிய  பாஜக அரசு 2019ஆம் ஆண்டு நிறைவேற்றி யது. இச்சட்டத்திருத்தத்தினை நாடாளு மன்றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்  துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்று மையோடு நிறைவேற்றுவதற்கு மாறாக அவ சர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடா ளுமன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த சலுகைகளை பெறுவதற்கு பாஜக ஒன்றிய அரசு பணக்கா ரர்களுக்கு சேவகம் செய்யும் நோக்கோடு வரு மான வரம்பினை தீர்மானித்து ஏழைகளை  வஞ்சித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் 103ஆவது சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் மேற்கண்ட சட்டத்திருத்தம் செல்லத்தக்கதாகியுள்ளது.

பணம் படைத்தவர்களுக்கான ஒதுக்கீடு

மேற்கண்ட தீர்ப்பினை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் நலி வுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை பெறு வதற்கு ஒன்றிய பாஜக அரசு தீர்மானித்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம், அதிகபட்சம் 5 ஏக்கர் நிலம், ஆயிரம் சதுரஅடி அளவில் குடியிருப்பு மனை மற்றும் 900 சதுர அடி  அளவிற்கு குடியிருப்பு வீடு என்ற வரம்பினை மாற்றியமைக்க தவறியுள்ளது. மேற்கண்ட  வருமான வரம்பின் மூலம் பொருளாதா ரத்தில் நலிவுற்றவர்களுக்கான இடஒதுக்கீடு  என்ற நோக்கத்தையே ஒன்றிய பாஜக அரசு பாழடித்துள்ளது. இதன் மூலம் ஏழைகளி லும் ஏழைகளாக இருப்போர்களுக்கு எதி ரான பாகுபாடு மேலும் தீவிரமடைந்துள்ளது. பணம் படைத்தவர்களுக்கான இடஒதுக்கீ டாக இது மாற்றப்பட்டுள்ளதானது எந்த வகை யிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை  மறுபரிசீலனை செய்ய வற்புறுத்த வேண்டிய  தேவையுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட 103ஆவது சட்டத்திருத்தத்தின்படி இடஒதுக் கீட்டு வரம்புக்குள் வராத நலிந்த பிரிவின ருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை  (Subject to a Maximum of 10 percent)   இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்  பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்பிரிவின ருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கட்டாயமாக  வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட வில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவின ருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்டரீதியான நிர்ப்பந்தம் ஏதும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்  கிறோம்.

அதீத ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை யில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி 95 சத விகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற் குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சத விகிதம் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் இடம்பெறவில்லை என விபரங்கள் தெரிவிக்  கின்றன. இப்பிரிவு 5 சதமான மக்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீ டாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரி வினரின் மக்கள் தொகையினை கணக்கீடு  செய்வதற்கும், அவர்களின் எண்ணிக்கை யின் அடிப்படையில் அளிக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு அளவினை தீர்மானிக்கவும், இச் சலுகை பெறுவதற்கான வருமான வரம்பை சிபாரிசு செய்வதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டுமெனவும், அந்த ஆணையத்தின் சிபாரிசுகள் அடிப்படையில் செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்று கூறப் பட்டுள்ளது.