states

இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்காத துறையே இல்லை

வாஷிங்டன்,ஏப்.12- இந்தியா - அமெரிக்கா அமைச்சர்கள்  மட்டத்திலான டூ பிளஸ் டூ (2+2) பேச்சு வார்த்தை  நான்காவது முறையாக வாஷிங்டனில் ஏப்ரல் 11அன்று  நடைபெற்றது.  இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கின், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகி யோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில்,  இரு நாடுகள் இடையேயான உறவு, பருவநிலை நட வடிக்கை, கொரோனா, கடல்சார் பாது காப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும்  இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்து ழைக்காத துறையே இல்லை என்றும் புளகாங்கிதமடைந்து கூறியுள்ளார்.  இந்த நிகழ்வில்  அமெரிக்க பாது காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பேசுகை யில், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்புக்கு இந்திய- அமெரிக்க உறவு அஸ்தி வாரமாக திகழ்வதாகவும் இந்த கடல்  பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயல்வதாகவும்  இந்தியா-அமெரிக்கா உறவை மேம்படுத்துவதன் மூலம் அதிகார சமநிலையை உறுதி செய்யமுடியும் என்றும் கூறிக்கொண்டார்.