இன ரீதியாகவோ, கலாச்சார ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ தங்களுக்கு பிடிக்கா தவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து விலக்கி வைக்க அரசாங்கம் விரும்பும். ஜனநாய கத்தில் வாக்காளர்கள் பட்டியல் மிக அடிப்படை யான விஷயம். நிர்வாகத் தலையீட்டை தவிர்த்து சுதந்திரமாக வாக்களிப்பதை அடிப்படை உரிமை யாக்க வேண்டும் என்று 1949 ஜூன் மாதம் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு முக்கியப் பிரிவாக இந்திய தேர்தல் ஆணையத்தை அமைக்கும் பொழுது அது தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்தி உரை யாற்றினார். ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினமாக கொண்டா டப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் அதன் 75 ஆவது பிறந்த நாளை அனுசரிக்கிறது. ஆனால் அந்த ஸ்தாபகத் தலைவர்கள் இன்று இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். மகாராஷ்டிரா தேர்தல் முறைகேடுகள் 2024 மகாராஷ்டிரா மாநில தேர்தலில் 9.7 கோடி வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. மோடி அரசாங்கத் தின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை அந்த மாநிலத்தின் மொத்த வயது வந்தோர் எண்ணிக் கை 9.54 கோடி என அறிவித்திருந்தது. அப்படி என்றால் தேர்தல் ஆணையம் 16 லட்சம் வாக்கா ளர்களை அதிகமாக சேர்த்தது எப்படி?
6 மாதத்தில் 48 லட்சம்
48 லட்சம் வாக்காளர்கள் 6 மாத கால இடை வெளியில் எப்படி சேர்க்கப்பட்டனர்? 2019 முதல் 2024 வரை 32 லட்சம் பேர் மட்டுமே சேர்க்கப் பட்டுள்ள நிலையில் இது பலத்த சந்தேகங்களை தேர்தல் ஆணையத்தின் மீது எழுப்புகிறது. அது வும் முந்தைய ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் ஆறு மாதங்களில் 50% அதிகமாக வாக்காளர் கள் எப்படி சேர்க்கப்பட்டனர்?
தேர்தல் ஆணையம் விளக்குமா?
1. மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் மாநில தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 72 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 24 லட்சம் பேர் மட்டுமே விலகினார்கள். மீதமுள்ள 48 லட்சம் வாக்குகள் எப்படி கிடைத்தது? 2. வியக்கத்தக்க வகையில், 48 லட்சம் பேரை புதிய வாக்காளராக சேர்த்துள்ளதை இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்கிறது. இது ஒரு அதிசய தற்செயல் நிகழ்வா? தெய்வீகத் தலை யீடா? அல்லது ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகமா? 3. புதிய வாக்காளர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டதா? அவர்கள் அனைவரும் ஒரே கூட்டணிக்கு வாக்களித்தார்களா? பூசி மெழுகும் வேலை எதிர்க்கட்சிகள் ஏன் கொடிபிடித்து போராட வில்லை என்று ஏகடியம் பேசுகிறது. ஒரு அரசி யல் கட்சியின் திறமை இன்மையை சாக்காக வைத்து குற்றச்சாட்டுகளை தட்டிக் கழிக்க முயல்கி றது. முறைகேடுகளை பூசி மெழுகப் பார்க்கிறது.
தீர்வுகள்
ஆதார் அட்டையின் அடிப்படையில் வாக்கா ளர் பட்டியலை சரி பார்க்கலாம். இரட்டிப்பாகி இருந்தால் நீக்கலாம். மேலும் பயோமெட்ரிக் சரிபார்ப்பின் மூலம் உண்மைத்தன்மையை உறுதி செய்யலாம். மகாராஷ்டிரா மாநில தேர்தலின் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற தில்லுமுல்லுகளை பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாகிறது. வாக்கா ளர் பட்டியலின் புனித தன்மையை, ஜனநாய கத்தின் அடித்தளத்தை காப்பாற்றுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தவறியிருக்கிறது. எனவே வாக்காளர் தினத்தை கொண்டாடுவதற்கு இதற்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
கட்டுரையாளர் : காங்கிரஸ் கட்சியின்
தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவுகளின் தலைவர்
தி இந்து நாளிதழ் (24/1/25)
தமிழில் : கடலூர் சுகுமாரன்