states

கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மதுரை, செப் 9- மாணவர்களுக்கு கல்வியை கட்டாயம் இலவசமாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தேனி மாவட் டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை வெள்ளி யன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்பு நடை பெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவரின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவரின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச் செலவையும் அரசாங்கமே வழங்கு கின்றது. கல்வி என்பது மாணவர்களுக்கு கட்டாயம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் கல்வி பயிலும் மாண வர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் சூழ்நிலையும் கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் விலை உயர்ந்த கார்களில் பயணிப்பதுமே தற்போதைய சூழலாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணங்கள் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று நிதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

;