states

img

ரயில்வே தனியார்மயத்தை கைவிடுக!

சென்னை, மே 8- தட்சிண ரயில்வே எம்ளாயீஸ் யூனியன் ஒர்க்ஷாப் டிவிஷன் மாநில மாநாடு சென்னையில் தோழர்கள் கே.சங்கரநாராயணன், என்.தனபால் நினைவரங்கில் ஞாயிறன்று (மே 8) நடைபெற்றது. சங்க கொடியை சாமி துரை ஏற்றினார். டிவிஷன் தலைவர் பி.மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் பால்ஜிஜோனி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். டிஆர்இயூ இணைப் பொதுச் செய லாளர் ஆர்.ஜி.பிள்ளை மாநாட்டை துவக்கி வைத்தார். டிவிஷன் செயலா ளர் ஜி.சிவக்குமார் வேலை ஸ்தாபன அறிக்கையையும், பொருளாளர் ஜி.எதுகிரி வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். டிஆர்இயூ பொதுச் செயலாளர் பி.மாத்யூசிரிக், இணைப் பொதுச்செயலாளர் டி.ராஜகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். செயல் தலைவர் அ.ஜனாகிராமன் மாநட்டை நிறைவு செய்து பேசினார்.  முன்னதாக வேணுகோபால் வரவேற்றார். டிவிஷன் துணைச்செய லாளர் ஞானசிகாமணி நன்றி கூறி னார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கக் கூடாது, ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்கும் குடும்ப பாஸ் டிஜிட்டல் பாசாக மாற்றப் பட்டதால் அவர்களை முன்பதி வில்லாத ரயில் பெட்டிகளிலும் பயணி ப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.  தினசரி 100 கி.மீட்டருக்கு மேல் பயணித்து வேலைக்கு வரும் தொழிலா ளர்களுக்கு ஆர்.சி. பாஸ் வழங்க வேண்டும் ரயில்வே மருத்துவ மனையில் எச்.ஆர்.எம்.எஸ். டிஜிட்டல் பதிவு முறையால் புறநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக பி.மகேந்திரன், செய லாளராக ஞானசிகாமணி, பொருளா ளராக ஜி.ரகுபதி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.