மதுரை, மே 11- மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மே 11 புத னன்று மேயர் அறை முன்பு செய்தி யாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்கான பட் ஜெட் கூட்டத் தொடர் மே 11 புதனன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் துவங்குவதற்கு முன் அதி முக மாமன்ற உறுப்பினர்கள் அவர் களுக்கு ஒதுக்கிய இருக்கையில் அமராமல் திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பி னர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக் கையில் அமர்ந்தனர். மேயர், ஆணை யாளர் வருகை தர சற்று தாமதம் ஆனதால் இருக்கை ஒதுக்கீடு இன்றி திமுக, காங்கிரஸ், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக உறுப்பி னர்களிடம், ‘இது எங்களுக்கு ஒதுக் கிய இருக்கை. நீங்கள் உங்களு டைய இருக்கையில் அமருங்கள்’ என்று கூறினர். அதற்கு அதிமுக வினர், எதிர்க்கட்சி என்று தனியாக இருக்க வேண்டும். அது ஒதுக்கி னால்தான் நாங்கள் அனைவரும் எழுந்திருப்போம் என்று கூறினர். இதனை தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், கூட் டத்திற்கு இடையூறாக இருக்கும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களை வெளியேற்றச் சொல்லி முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற் காக மேயர் அறைக்கு சென்றனர். அப்போது இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியா ளர்களை மேயர் அறை முன்பாக இருந்த மேயரின் ஆதரவாளர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தி கேமராவை காலால் எட்டி உதைத்து உடைத்தனர். மேயர் ஆதரவாளர்களின் அரா ஜகப் போக்கை கண்டித்து செய்தியா ளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.
மேயர் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் மேயர் அறை
மதுரை மாநகராட்சி மேயர் அறை யானது அவரது ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த வொரு விஷயத்திற்கும் மேயரை செய்தியாளர்கள் சந்திக்க முடிவதே இல்லை. மாமன்ற கூட்ட அரங்கில் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப் படும் இடங்களில் மாமன்ற உறுப்பி னர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே அமர்கிறார்கள். செய்தியாளர்கள் முழுமையாக அமர்ந்து செய்தி சேக ரிக்க முடிவதில்லை. புகைப்படங்கள் எடுப்பதற்கு மட் டும்தான் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி என்று மாநகராட்சி நிர்வா கம் கூறுகிறது. ஆனால் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் வீடியோ, புகைப்படம் எடுப்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடிய வில்லை என்று பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் புகார் தெரிவித்தனர். இதனால் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமார் ஒரு மணி நேரம் தாம தமாகவே துவங்கியது. செய்தியாளர்கள் தாக்கப்பட் டது குறித்து உரிய விசாரணை மேற் கொள்ளப்படும் என்று மேயர் இந்தி ராணி உறுதியளித்தார்.