states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் ஒப்புதல் தெரிவித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. திரைக்கதை எழுதிக் கொடுக்கப்பட்ட நேர்காணல்களை, நண்பர்களின் ஊடகங்களில் பேசவே மோடிக்கு மேலும் சரியாக இருக்கிறது. உண்மையான பிரச்சனைகளை பேச அவர் பயப்படுகிறார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதரமும் இல்லை. அமலாக்கத்துறை சோதனையில் 100 ரூபாய் கூட கைப்பற்ற முடியவில்லை. ஆனால் பொய் வழக்குகளில் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் பொது மக்களுக்கானது. முதலாளிகளுக்கானது அல்ல. முக்கியமாக உள்ளூர் மக்களை காக்கின்ற தேர்தல்; முன்னேற்றத்திற்கான தேர்தல் ஆகும்.

யூ டியூபர் துருவ் ரதி

பெண்கள் பாதுகாப்பு, அரசியலமைப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, எல்லைப் பாதுகாப்பு, ஊழல், விவசாயிகள், பொறுப்புத் தன்மை, கல்வி, எப்படிப்பட்ட பிரதமர் தேவை என்று, வாக்களிக்கும் முன்பு நமக்கு எந்த மாதிரியான ஆட்சி வேண்டும் என்று சிந்தித்து வாக்களியுங்கள்.

 

;