மாஸ்கோ, ஜூன் 24- இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி கணிசமான அளவு க்கு அதிகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மேற்கத்திய நாடுகள் மறுத்து விட்டன. இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியும் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவின் நட்பு நாடாக நீடித்து வருகிறது. சீனாவின் தலைமையில் நடை பெறும் 14-ஆவது பிரிக்ஸ் வர்த்தக மாநாட்டை ஒட்டி காணொலியில் பேசிய புடின், பிரிக்ஸ் குழும நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகம் கடந்த மூன்று மாதங்க ளில் 38 சதவீதம் அதாவது 45 பில்லியன் டாலர் இலக்கை எட்டியுள்ளதாகத் தெரி வித்தார்.