states

பிப்ரவரி 22 - 28 நாடு தழுவிய கிளர்ச்சிப் பிரச்சாரம்

கொல்கத்தா, ஜன.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் ஜனவரி  28-29 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதார மந்த நிலைமை தீவிர மடைந்திருப்பதன் காரணமாக இந்தியப் பொரு ளாதாரமும் தள்ளாடுவது தொடர்கிறது. பொரு ளாதாரத்தை மீட்டெடுத்துவிட்டோம் என்று என்னதான் அரசுத்தரப்பில் தம்பட்டம் அடிக் கப்பட்டாலும், இந்தியாவின் உற்பத்தித் திறன்  களை அதிகரித்திடத் தேவையான முதலீடுகள் அதிகரிக்கப்படவில்லை. இதன் பொருள்,  வேலைவாய்ப்பு என்பது தேக்க நிலையில் இருக்கிறது. இது வீழ்ச்சியடையாவிட்டாலும், மிகப்பெரிய அளவிற்கு வறுமையையும், துன் பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தீவிரமடையும் சமத்துவமின்மை:

‘பணக்காரர்கள் தொடர்ந்து செழிப்படை தல்: இந்தியாவின் துணை’ என்னும் ஆக்ஸ்ஃபாம்  அறிக்கையானது, இந்தியாவின் செல்வத்தில்  40 விழுக்காட்டிற்கும் அதிகமாக, மொத்த மக்  கள்தொகையில் 1 விழுக்காட்டினர் பெற்றுள்  ளார்கள் என்றும், 10 மிகப்பெரும் பணக்கா ரர்களின் மொத்த செல்வ வளம் என்பது,  2021இல் இருந்ததைவிட 32.8 விழுக்காடு உயர்ந்து, 2022இல் 27.52 லட்சம் கோடி ரூபா யாக உயர்ந்திருக்கிறது என்றும் மக்கள் தொகையில் கீழ்நிலையில் உள்ள 50 விழுக்  காட்டினர் வெறுமனே 3 விழுக்காடே பெற்றி ருக்கின்றனர் என்றும் கூறுகிறது. இந்தியாவில் 2020இல் 102 பில்லியனர் களாக இருந்த எண்ணிக்கை, 2022இல்  160ஆக அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில்  முற்றிலும் நேரெதிரான நிலையில், வறிய  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்  ணிக்கையோ 23 கோடியாகும். இது உலகி லேயே வறுமை நிலையில் வாழ்வோரில் மிக  அதிக எண்ணிக்கையாகும். இதேபோன்றே வரி விதிப்பு முறையும் மிக வும் பின்னடைந்த நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதாவது, நம் நாட்டு மக்களில் அடிமட்டத்தில் உள்ள 50 விழுக்காட்டினர் உயர் 10 விழுக்காட்டினருடன் ஒப்பிடும்போது பெறுகின்ற வருமானத்தில்  6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்து கிறார்கள். உணவு மற்றும் உணவு அல்லாத  அத்தியாவசியப் பொருள்கள் மீது வசூலிக்கப்  பட்டுள்ள மொத்த வரிகளில் 64.3 விழுக்காடு, அடிமட்டத்தில் உள்ள 50 விழுக்காட்டினரால் செலுத்தப்படுகிறது. மோடி அரசாங்கத்தால் உயர் பணக்கா ரர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் வரிச் சலுகை கள் ரத்து செய்யப்பட்டு, செல்வ வரி மற்றும்  வாரிசு வரி முதலானவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அனைத்து அத்தியாவசியப் பொருட்  கள் மீதும், குறிப்பாக உணவுப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட வேண் டும்.   

மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுதல்

மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தும் முயற்சிகள் பல வழிகளிலும் மேற்கொள்ளப் ட்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும், தங்கள் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறி வித்திருக்கின்றன. இத்துடன் இவை முஸ்லீம்  தனிநபர் சட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்  என்பது குறித்தும் கடுமையான முறையில்  கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக் கின்றன. பாஜக தலைமையிலான அனைத்து மாநில  அரசாங்கங்களுமே முஸ்லீம் சிறுபான்மை யினரைக் குறிவைத்து ‘லவ் ஜிகாத் தடுப்பு’  அல்லது ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில்  ஏற்கனவே சட்டங்களை நிறைவேற்றியிருக் கின்றன. விரும்பி மதம் மாறி, இரு மதத்தினர் கலப்புத்திருமணம் செய்துகொள்வதைத் தடுத்திடும் விதத்தில் நிபந்தனைகளை உரு வாக்கிக் கொண்டிருக்கின்றன. கல்வி நிறு வனங்களில் முஸ்லீம் மாணவர்களுக்கு எதி ராக வெறுப்பை விதைத்திடும் விஷமம் மிகவும் ஆபத்தான முறையில் அதிகரித்துக்கொண்டி ருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. உத்தரப்பிரதேச பாஜக மாநில அரசாங்கம், அடிப்படை அரசமைப்புச்சட்ட உத்தரவாதங் களைக்கூட முஸ்லீம் சிறுபான்மையினருக்கு மறுக்கும் விதத்தில் மிகவும் கொடூரமான முறை யில் மதவெறித் தீயை விசிறி விட்டுக் கொண்டி ருக்கிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசம் ராப ரேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளியின்  முதல்வர், தன்னுடைய பள்ளியில் மாணவர்கள் மிகவும் புகழ்பெற்ற உருது பிரார்த்தனை பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்ததற்காக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் வடக்கு பாஸ்டர் மாவட்டத்  தில் கிறித்தவர்கள் மீது பெரிய அளவில் தாக்கு தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கிறித்  தவர்கள், இந்துக்களை மதமாற்றம் செய்கி றார்கள் என்று கூறி இவ்வாறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இது உண்மையில்லை. இந்தக் காலகட்டத்தில் எவ ரொருவரும் கட்டாயமாக மத மாற்றம் செய்  யப்பட்டதாக செய்திகள் எதுவும் வெளிவர வில்லை. தங்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிர லைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துட னேயே ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் அரவ ணைப்புடன் பஜ்ரங் தளத்தால் ‘தாய்மதத் திற்குத் திரும்புகிறோம்’ என்பதை வலுக்கட்  டாயமாக ஏற்க வேண்டும் என்கிற அடிப்படை யில் இவ்வாறு கிறித்தவ மதத்தினர் மீது குறி வைத்துத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களின் வன்முறை வெறியாட்டங்கள் குறிப்பாக பெண்  கள், குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் பதக்கங்களைப்பெற்று திரும்பிவந்துள்ள பெண் மல்யுத்த வீராங்கனைகள், தங்களைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கு வதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலை வரும், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பின ராகவும் இருக்கின்ற ஒருவர் மீது மிகவும் மோச மான குற்றச்சாட்டைச் சுமத்தி இருக்கிறார்கள்.  இந்த நபருக்கு எதிராக அரசாங்கமோ அல்லது ஆளும் கட்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பில்கிஸ் பானு வழக்கில் சிறைத் தண்டனை  பெற்ற குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையாகி வெளியே வந்தபோதும், 2014இல் புனேயில் நடைபெற்ற  மொய்தீன் ஷேக்  என்பவர் கொடூரமான முறை யில் கொலை செய்யப்பட்ட வழக்கில் விடு தலை செய்யப்பட்டு வெளியே வந்த 21 நபர்  களும் இந்துத்துவா அமைப்பினரால் மிகப்  பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருக்கி றார்கள். இவ்வாறு இந்தப் பேர்வழிகள் விடு தலை செய்யப்பட்டதற்கு எதிராக காவல் துறையோ நிர்வாகமோ இவற்றை எதிர்த்து, மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு எது வும் இதுவரை செய்திடவில்லை.

நீதித்துறையின் சுதந்திரம் அரித்துவீழ்த்தப்படுதல்

அரசாங்கமானது, நீதித்துறையை முழுமை யாகத் தங்களுக்குத் ‘தலையாட்டும்’ நீதித்  துறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்து டன், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களின் கொலீஜியங்கள் பரிந்துரை செய்துள்ள பல்வேறு பெயர்களை ஏற்காமல்  தாமதம் செய்வதன் மூலமோ அல்லது நிரா கரிப்பதன் மூலமோ, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியம னங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் குறிக்கோள், உயர்  நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் தங்க ளுக்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும் என்ப தாகும். அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள நீதித்  துறையின் சுதந்திரம் இவ்வாறு பறிக்கப்படுவ தென்பது, எதேச்சதிகாரத்தின் முழுமையான ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது. ஆளுநரின் பங்கு கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்கு தலை மேலும் உக்கிரப்படுத்தும் விதத்தில், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் உள்ள ஆளுநர்களும், துணை ஆளு நர்களும் பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை  முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற  நோக்கத்துடன், அரசமைப்புச்சட்ட நிலைப் பாடுகளை மீறி மிகவும் வெட்கக்கேடான முறை யில் செயல்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கி றது. கேரளம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில ஆளு நர்களும், தில்லி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் புதுச்சேரியில் உள்ள துணை ஆளுநர்களும் தங்களுடைய அரசமைப்புச்சட்ட நிலைபாடு களை முற்றிலும் தவறான முறையில் துஷ்பிர யோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.    தமிழ்நாடு ஆளுநர், சட்டமன்றப் பேரவை யில் மாநில அரசாங்கத்தால் தயார் செய்து  தரப்பட்ட ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்க மறுத்துவிட்டார். கேரள ஆளுநர், மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பது தொடர்கிறது.

ஆளுநரின் அலுவலகங்கள்,  மாநில அர சாங்கங்களுக்கு, தாங்கள் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள பங்கினை  ஆற்றாமல், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதி ரான அணுகுமுறையைக் கடைப்பிடித்துக் கொண்டு, அதிகாரங்களை மையப்படுத்து வதில் நாட்டமுடன் இருந்து வருகின்றன.

திரிபுரா சட்டமன்றத் தேர்தல்கள்

ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியை யும் அரித்துவீழ்த்தி, வன்முறை வெறியாட்டங் களுடன் ஆட்சி புரிந்துவரும் திரிபுரா பாஜக அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிட, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி களின் ஒத்துழைப்பையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரி இருக்கிறது. தற்போது அங்கே நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்கள், மக்கள் மத்தி யில் அச்ச உணர்வை ஊட்டும் விதத்தில் உள்  ளன. இது நிச்சயமாக நியாயமாகவும் நேர்மை யாகவும் தேர்தல் நடைபெறுவதைப் பாதித்தி டும். தலைமைத் தேர்தல் ஆணையம் இதில்  முன்கூட்டியே தலையிட்டு, நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்திட, உரிய நடவடிக்கை களை உடனடியாக எடுத்திட வேண்டும். திரிபுராவில் ஜனநாயகமும் ஜனநாயக  உரிமைகளும் முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும். இதற்கு நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறு வது அவசியமாகும்.

மத்தியக் குழுவின் அறைகூவல்

    திரிபுராவில், நியாயமாகவும் நேர்மை யாகவும் தேர்தல் நடைபெற ஒரு முன்நிபந்  தனையாக ஜனநாயகம் மற்றும் ஜன நாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படு வதற்கு, போராடிக்கொண்டிருக்கும் திரி புரா மக்களுக்கும், மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆதரவை தெரி வித்துக் கொள்கிறது.     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிபுரா விற்கு ஆதரவு தெரிவித்து, நாடு தழுவிய  அளவில் இயக்கங்களுக்குத் திட்டமிடும்.

    அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையுடன் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது தாக்கு தல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு எதிராக வரும் பிப்ரவரி 22 முதல் 28 வரையிலான நாடு தழுவிய  அளவில் கிளர்ச்சிப் போராட்ட நடவ டிக்கைகளுக்கு அறைகூவல் விடுக்கப் பட்டிருக்கிறது.  

    இத்துடன், 2023-24 பட்ஜெட்டால் ஏற்  படும் பிரச்சனைகள் குறித்தும் பிரச்சா ரம் மேற்கொள்ளப்படும். இவற்றுடன் கீழ்க்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக வும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்: *     ஆட்சியாளர்கள் உள்கட்டமைப்பு வசதி களை உருவாக்குவதற்கான திட்டங் களை மேற்கொள்வதற்காக பொது முத லீடுகளை உயர்த்திட வேண்டும்.

*    5 கிலோ உணவு தானியம் இலவசமாக  வழங்கப்படுவதுடன், மானிய விலையி லும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்  கப்பட வேண்டும்.

*    மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடுகளை உயர்த்தி, ஊதியத்தை யும் உயர்த்திட வேண்டும்.

*    செல்வ வரி மற்றும் வாரிசு வரி அமல் படுத்திட வேண்டும். *    பணக்காரர்களுக்கான வரிச்சலுகை களை ரத்து செய்திட வேண்டும். பெரும்  பணக்காரர்களுக்கு வரி விதித்திட வேண்டும்.

*    மருந்துகள் மற்றும் உணவு மற்றும் அத்தி யாவசியப் பண்டங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிகளை ரத்து செய்திட வேண்டும்.

    2023 ஏப்ரல் 5 அன்று நாடாளுமன்றம் நோக்கி தொழிலாளர்கள்-விவசாயிகள்  நடத்திடும் பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன் முழு ஆதரவினைத் தெரி வித்துக் கொள்கிறது.மார்ச் மாதம் முழு வதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  கீழ்க்கண்ட பிரச்சனைகள் குறித்து பிரச்சா ரம் மற்றும் நடவடிக்கைகளுக்குத் திட்ட மிடும்.

1)    தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங் கங்களுக்கு எதிராக, குறிப்பாக பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களுக்கு எதிராக, ஒன்றிய அரசாங்கம் மேற் கொண்டுவரும் தாக்குதல்களுக்கு எதி ராக, நாட்டிலுள்ள கூட்டாட்சி அமைப்பு முறையை ஒழித்துக் கட்டி விட்டு, ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்காக ஒன்றிய ஆட்சி யாளர்கள் மேற்கொண்டுவரும் நடவ டிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2)    நீதித்துறையின் சுதந்திரத்தை அரித்து வீழ்த்திட பாஜக அரசாங்கம் மேற் கொள்ளும் முயற்சிகளைக் கண்டித்து, பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தை, தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற முறையில் ஒன்றிய அர சாங்கம் மேற்கொண்டுவரும் நடவ டிக்கைகளுக்கு எதிராகவும், நீதித்துறை யின் அரசமைப்புச்சட்ட பங்கினைப் பாது காத்திடவும், அனைத்து ஜனநாயக சக்தி களும் அணிதிரட்டப்பட வேண்டும்.

3)    நியாயமான மற்றும் நேர்மையான முறை யில் தேர்தல்கள் நடைபெறுவதை உத்தர வாதப்படுத்திடக்கூடிய விதத்தில் தேர்தல்  சீர்திருத்தங்களில் ஜனநாயகம் மற்றும் அனைவரும் சமமான முறையில் நடத்தப்  பட வேண்டியது அவசியம். இதுதொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு தன்னு டைய அரசியல் தீர்மானத்தில் கூறியுள் ளவை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.

4)    வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கத்தி னால் பாலஸ்தீன மக்கள் மீது ஏவப்  பட்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கை களுக்கு எதிராக ஆதரவு பிரச்சாரங்க ளுக்குத் திட்டமிடப்படும். தமிழில்: ச.வீரமணி