சிகரெட், பீடியால் 8 ஆயிரம் டன் கழிவுகள்
சென்னை, மே 31- உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை யொட்டி நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மேரி அன்னே அறக்கட்டளை மற்றும் தி யூனியன் அமைப்பு நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் 8 ஆயிரம் டன் புகையிலை கழிவுகள் வெளியாவது தெரிய வந்துள்ளது. இதில் சிகரெட் கழிவு கள் 4,039 டன், பீடி கழிவுகள் 606 டன் ஆகும். மற்றவை புகையில்லா புகையிலை கழிவுகளாகும். தமிழ்நாட்டில் வசிப்பவர்க ளில் 20 விழுக்காட்டினர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். 6.3 விழுக்காடு பேர் சிகரெட் குடிப்பவர்கள். பீடி புகைப்ப வர்கள் 5.4 விழுக்காட்டினராகும். புகையிலை பயன்பாடு உடல்நலத் திற்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி தயாரிப்பு கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலை பொருட்களை பேக்கேஜிங் செய்வதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பது எங்களது பரிந்துரையாகும். கழிவு பொருட்களை அகற்ற உற்பத்தி நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அல்லது கழிவு களை அகற்ற அரசு பணம் வசூலிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
சென்னை, மே 31- தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதுகுறித்து மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாட்டில் புதிதாக 12 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 89 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,55,376 உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 74-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இது வரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது 493 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் சொத்து விவரம்
சென்னை, மே 31- தமிழ்நாட்டில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களுடன் அளித்த பிர மாண பத்திரத்தில், அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை அளித்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த எஸ்.கல்யாண சுந்தரத்தின் பெயரில் ரூ.43.46 லட்சம் மதிப்பு அசையும் சொத்துக்கள். அவரது இரு மனைவிகள் பெயரில், 113 சவரன் தங்கம், வைர நகைகள் உட்பட ரூ.67.76 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக் கள் உள்ளது. கல்யாண சுந்தரம் பெயரில் ரூ.3.46 கோடி மதிப்பு அசையா சொத்துக் கள், மனைவிகள் பெயரில் ரூ. 1.39 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருக்கி றது. கல்யாண சுந்தரம் பெயரில் ரூ.4.53 லட்சம், மனைவிகள் பெயரில் ரூ. 20.76 லட்சம் கடன் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மற்றொரு வேட்பாளரான கிரிராஜன் பெயரில் ரூ.1.53 கோடி மதிப்பு அசையும் சொத்துக்கள், ரூ.5.12 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள். மனைவி பெயரில் ரூ.1.04 கோடி மதிப்பு அசையும் சொத்துக் கள், ரூ.39.47 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளன. கிரிராஜன் பெயரில் ரூ.3.17 கோடி மதிப்பு கடன், மனைவி பெயரில் ரூ.2.87 கோடி மதிப்பு கடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பெயரில் ரூ.17.15 லட்சம் அசையும் சொத்துக்கள், ரூ.78.08 லட்சம் மதிப்பு அசையா சொத்துக் கள். மனைவி பெயரில் ரூ.27.07 லட்சம் அசையும் சொத்துக்கள், ரூ.47.40 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் மீதான தாக்குதல்களை சவூதி அரேபியா அதிகரித்து வரும் நிலையில், தாக்குதலில் உடன்நிற்கும் கூட்டாளிகளின் நோக்கம் அம்பலமாகியுள்ளது. சவூதி அரேபியாவில் பதுங்கி நிற்கும் ஏமன் முன்னாள் ஆட்சியாளர்கள், ஒரு எண்ணெய் வயலை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்றிருக்கிறார்கள். ராணுவ ரீதியாக இந்த எண்ணெய் வளத்தைக் கைப்பற்றியுள்ள சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகள், அதைச் சுரண்டும் நோக்கத்தில் “விற்பனை” நாடகம் ஆடியிருக்கிறார்கள்.
தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரஹ்மோன் ஈரானுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ளார். முதல் நாளிலேயே இரு தரப்பும் பல்வேறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன. எரிபொருள், சுற்றுச்சூழல் முதல் சுற்றுலா மற்றும் நகர்ப்புற மேம்பாடு வரையில் பல்வேறு அம்சங்கள் அடங்கிய உடன்பாடுகளாக அவை இருந்தன. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஒத்த கருத்து இருக்கிறது என்று இருதரப்பும் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக சாட் நாட்டின் வடபகுதியில் கவுரி போகோடி தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. இரு நபர்களுக்கிடையில் வாய்த் தகராறாகத் துவங்கிய சண்டை, இரு குழுக்களாகப் பிரிந்து கலவரமாக வெடித்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வெளிநாட்டினர் உடனடியாக அருகில் உள்ள லிபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.