சென்னை, மே 25- தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள் முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடன டியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற் பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இது நாள் வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ் நாட்டிலுள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்தது. தற்போது, பால் உற்பத்தி செய்யப் படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்து வருகிறது. அமுல் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப் படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள் ளது. இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டு றவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள் முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், இந்த நிறு வனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டு றவு மனப்பான்மையுடன் செயல் பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற் படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறு வனத்தின் பால் உற்பத்திப் பகுதி களில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.