2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியது இந்தியா. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மக்கள்தொகை அறிக்கையின்படி, “இந்தியாவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் 2050-ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர். முதியோர்களின் எண்ணிக்கை அடுத்த 27 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனத் தெரிவித்துள்ளது. தற்போது உலகின் இளைய மக்கள்தொகை யைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆனால் 2050-ஆம் ஆண்டுக்குள் 347 மில்லியன் (34.7 கோடி) முதியோர்களின் இருப்பிடமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் மதிப்பிட்டுள்ளது. 2046-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியோர்களின் சதவீதம் அதிகமாக இருக்கும் என்று புதன்கிழமை (செப்.27,2023) வெளியான இந்திய முதியோர் அறிக்கை தெரிவிக்கிறது. 2022-ஆம் ஆண்டு ஜூலை 1 வரை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 149 மில்லியன். இவர்கள் மக்கள்தொகையில் 10.5 சதவீதம். 2050-ஆம் ஆண்டில், முதியவர்களின் பங்கு 20.8 சதவீதமாக இருக்கும். அதாவது இரட்டிப்பாகும். அதே நேரத்தில், 15-59 வயதுடையவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்பீட்டளவில் இளம் இந்தியா வரும் பத்தாண்டுகளில் வேகமாக “வயதான சமுதாயமாக” மாறும்.
உலகளவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் 210 கோடியாக அதாவது இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயதான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பார்க்க முடியும். 2022-ஆம் ஆண்டு 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எண்ணிக்கை 110 கோடி பில்லியன். இது உலக மொத்த மக்கள் தொகையான 13.9 சதவீதம். அதிக வளர்ச்சியடைந்த பகுதிகளில், வயதான வர்களின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு 26 சதவீதமாக இருந்தது. இது 2050-ஆம் ஆண்டில் 34 சதவீதமாக அதிகரிக்கும். குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் வயதானவர்களின் எண்ணிக்கை 11.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும். 35 வயதிற்குட்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் உலகிலேயே இந்தியாவில் தான் உள்ளனர் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதியவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் மிக ஏழ்மையான நிலையில் உள்ளனர். 18.7 சதவீதம் பேர் வருமானம் இல்லாமல் வாழ்கின்றனர். வயது முதிர்ந்த ஆண்களை விட வயது முதிர்ந்த பெண்கள் அதிக காலம் வாழ்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விதவை களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கும். வயதான விதவை பெண்கள் ஒரு சிறிய ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி தனி யாகத்தான் வசிக்கின்றனர். பலவீனமான உடல் நலப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
The National.com இணையதளத்திலிருந்து