states

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை வெறுப்பு அரசியலாக்கும் பாஜக

திண்டுக்கல், செப்.17- சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியையொட்டி வகுப்பு வாத வெறுப்பை கக்கும் பாஜக விற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனத்தை தெரிவித்துள்ளது.  திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்டச் செய லாளர்கள் கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது.  கூட்டத்தில், சென்னையில் இசை யமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி யில் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங் களை பயன்படுத்திக்கொண்டு பாஜக வினர் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழ்நாட்டிற்கும் இந்திய இசைக்கும் உலக அரங்கில் பெருமை தேடித்தந்தவர் ஏ.ஆர்.ரகுமான் ஆவார்.  ஆனால் அவரை மத வளையத்திற்குள் சிக்க வைத்து பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் போன்றவர்களே சிறுமைப் படுத்துவது அநாகரீகமான அரசியல் ஆகும். இத்தகைய வெறுப்பு அரசியல் பரப்புவோரை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.  பாஜக தலைவர்கள் சமீப காலங்களில் மிக அநாகரீகமாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அமைதியாக திகழும் தமிழ்நாட்டில் வன்முறை அரசியலை விதைத்து கலவரத்தை தூண்டும் வகையில் சமீபத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பல தமிழ்நாட்டு தலைவர்கள் பேசி வருகின்றனர். தமிழக அரசு இத்தகைய நபர்கள் மீது உறுதியான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் வன்முறை கலவரங்களுக்கு சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வந்துள் ளன. போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகை யில் மிரட்டல், மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  தமிழக அரசு உறுதியாக தலையிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் வேண்டு மென்றே ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையை நிர்ப்பந்திக்கிறார்கள். தமிழக காவல்துறை சங்பரிவார வன்முறையாளர்களின் இத்தகைய கோரிக்கைக்கு இடம் தராமல் அனுமதி மறுக்க வேண்டும். ஊர்வலத்தை யொட்டி எவ்வித வன்முறை சம்பவங்கள் நடைபெறாமலும் தடுத்து நிறுத்தி அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த வழி வகுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.