states

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அவதூறு

சிதம்பரம், ஜூலை 3- சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பவம் குறித்து  அவதூறு கருத்துக்களை பரப்பிய பாஜக மாநிலச்  செயலாளர் தலைமறைவா னார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆனி திருமஞ்சன தரிசன விழாவின்போது கோவில் தீட்சிதர்கள் 4  நாட்கள் கனக சபை மீது ஏறிப் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுத்து பதாகை வைத்தனர். இதற்குப் பக்தர்கள் மற்றும் தீட்சிதர்களின் ஒரு  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த னர்.  இந்நிலையில்  இந்து சமய அறநிலையத் துறை யினர் மற்றும் காவல் துறை யினர்  இது அரசாணைக்கு எதிரானது எனக் கடந்த 27 ஆம் தேதி கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்றனர். அப்போது கோயில் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கனகசபை யின் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது காவல்துறை யினர் மற்றும் இந்து சமய  அறநிலையத்துறை அலுவ லர்கள் தீட்சிதரைத் தாக்கிப் பூணூலை அறுத்ததாக ‘தி கம்யூன்’ என்ற டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருந்தது. இந்தக் கருத்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சிதம்பரம் நகர நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜ்தீன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் பாஜக  மாநில செயலாளர் எஸ்.ஜி  சூர்யா மற்றும் கௌசிக் சுப்பிரமணியன் ஆகியோர் ட்விட்டர் கணக்கை நிர்வ கித்த வந்தது தெரிய வந்தது.   இதையெடுத்து  நடராஜா  கோயில் சம்பவம் குறித்து  சமூக வலைதளங்களில் அவ தூறு பரப்பியது தொடர்பாக  பாஜக மாநிலச் செயலாளர் எஸ். ஜி சூர்யா மற்றும் கௌசிக் சுப்பிரமணியன் ஆகி யோர் 4-ஆம் தேதி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜ ராக வேண்டும் எனச் சிதம்ப ரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனை யறிந்த பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா, மற்றும் கௌசிக் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

;