சிறுமி பாலியல் குற்ற வழக்கு
பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்
தென்னிந்திய பாஜகவின் முக்கியத் தலைவரும், கர்நாடக முன் னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீட்டிற்கு கடந்த பிப்ரவரி 2 அன்று கல்வி விவகாரம் தொடர்பாக உதவி கேட்க பெண் ஒருவர் தனது மகளுடன் சென்றுள்ளார். அடுத்த சில நாட்களில் அதே பெண் எடி யூரப்பாவிடம் உதவி கேட்கச் சென்ற பொழுது தனது 17 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாயார் அளித்த புகா ரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. வழக்கு தொடர்ந்த சிறுமியின் தாயார் உயிரிழந்த சம்பவம் மற்றும் சிறுமியின் தாத்தா- பாட்டி மூலம் வழக்கு உயர்நீதி மன்றம் வரை சென்றதால், வழக்கை விசா ரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) எடியூரப்பா ஜூன் 12 அன்று ஆஜராக வேண் டும் என சம்மன் அனுப்பியது. ஆனால் எடியூரப்பா ஆஜராகாமல் தில்லிக்குச் சென்று,”ஜூன் 17 அன்று விசா ரணைக்கு ஆஜராகுவதாகவும், அதுவரை அவகாசம் வழங்கவேண்டும்” என எஸ்ஐடி போலீசாருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், எடியூரப்பாவின் பாலி யல் வழக்கு தொடர்பாக பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித் துள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 24 மணிநேரம் அல்லது 48 மணி நேரத்தில் எடியூரப்பா கைது செய்யப்பட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரில் வன்முறையை கிளப்ப பஜ்ரங்தளம் திட்டம்?
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் களில் ஒருவராக உள்ள தர்ஷன் தூகு தீபா, தனது காதலியான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாகக் கூறி, ரேணுகா சாமி என்பவரை தனது ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்கள் மூலம் கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகா ரத்தில் ஏற்கெனவே 3 பேரை மைசூரு போலீசார் கைது செய்த நிலையில், செவ்வாயன்று நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கைது செய்யப்பட்டார். 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருவருக்கும் 6 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி தீவிர இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தளத் தின் உறுப்பினர் மற்றும் பாஜக ஆதரவாளராக உள்ள வர் என தகவல் வெளியாகியுள்ளது. ரேணுகா சாமி விவகாரத்தை மையப்படுத்தி மைசூரில் போராட்டம் மூலம் வன்முறையை கிளப்ப பஜ்ரங் தளம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தில் தொடர்ந்து மடியும் இந்தியர்கள் 2 ஆண்டுகளில் 1,400 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆசிய நாடான குவைத் தின் அடுக்குமாடி குடியிருப் பில் புதனன்று நிகழ்ந்த தீ விபத் தில் 41 இந்தியர்கள் உட்பட 53 தொழி லாளர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீவிபத்து சம்ப வத்தையும் சேர்த்து கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு விபத்துகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி தக வலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில்,”2022இல் குவைத் தில் 731 இந்தியத் தொழிலாளர்களும், 2023இல் 708 இந்திய தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 1,439 இந்தியர்கள் உயி ரிழந்துள்ளனர். 2020 முதல் 2021 வரை கொரோனா காரணமாக 2,480 இந்தி யர்கள் குவைத்தில் உயிரிழந்துள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 28,889 மெகாவாட் மின்சாரம் தேசிய அளவில் முதலிடம் பிடித்த உ.பி.
கோடை காலம் நிறைவு பெற்ற பின்பும் வடமாநிலங்க ளில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதனால் வடமாநிலங்களில் மின்சார பயன்பாடு மின்னல்வேகத்தில் அதிக ரித்து வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநி லத்தில் மின்சாரப் பயன்பாடு மிக மிக அதிகளவில் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூன் 10 அன்று 28,889 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரி யத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் அதிக மின்சாரப் பயன்பாடு கொண்ட மாநிலங்களில் உத்த ரப்பிரதேசம் முதல் இடத்தைப் பிடித் துள்ளது.
வெளி மாநில பதிவு எண் ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை!
சென்னை, ஜூன் 13- தமிழ்நாட்டில் வெளி மாநில பதி வெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 14 முதல் இயங்க அனுமதி கிடை யாது என போக்குவரத்து துறை உத்தர விட்டுள்ளது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய் யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என் றும் போக்குவரத்துத் துறை தெரிவித் துள்ளது. கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற ஆம்னி பேருந்து உரிமையாளர் கள் கோரிக்கையை போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நிராகரித் துள்ளார். அரசின் இந்த உத்தரவால் ஜூன் 14 முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு சவுக்கு சங்கருக்கு எதிராக சிபிசிஐடி மேல்முறையீடு
சென்னை, ஜூன் 13- தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற் றும் கண்காணிப்பு இயக்குநர் (டி.வி.ஏ.சி) அலுவலகத்தின் ரகசியப் பிரி வில் சிறப்பு உதவியாளராக கடந்த 2008 ஆம் ஆண்டு பணியாற்றிய சவுக்கு சங்கர் அங்கு இருந்த சில உரையாடல் களை திருடி வெளியிட்டதாக சென்னை சிபிசிஐடி காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் காவல்துறை தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவ றிவிட்டதாக கூறி சங்கரை கடந்த அதி முக ஆட்சியில் 2017 ஆண்டு பிப்ரவரி 24 அன்று விடுதலை செய்தது. இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிசிஐடி காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் விசாரணை நீதிமன்றம் அரசு தரப்பு சாட்சிகளை முழுமையாக கவ னத்தில் கொள்ளவில்லை. மேலும் உரையாடல்களை பதிவு செய்த பென் டிரைவ் சவுக்கு சங்கர் உடையது அதில் சில ரகசியங்களை திருடி வெளியிட்டது அவர்தான். விசாரணை நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளவில்லை என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் நான்கு வாரத்தில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டை வெட்டுவது போல வெட்டுவதாக மிரட்டுகின்றனர்! பாஜக நிர்வாகி புகார்
கோயம்புத்தூர், ஜூன் 13- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தி யாளர்களிடம் பேட்டி அளித்த அவர், “தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அண்ணாமலையை கொச்சைப்படுத்தி பேசுவது மட்டுமல்லா மல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை புகைப் படத்தை மாட்டி நடு ரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள். இது பெரிய அச்சு றுத்தலை கொடுத்துள்ளனர். பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய் யப்படவில்லை. எனது முகநூல் பக்கத் தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டை வெட்டியதைப் போல உன்னை யும் கண்ட துண்டமாக வெட்டுவோம் என்று மிரட்டுகின்றனர். இவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரி டம் புகார் அளித்துள்ளோம்” என்று குறிப் பிட்டுள்ளார்.
ஆசிரியர் கல்வித் திட்ட நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
சென்னை, ஜூன் 13- தமிழ்நாட்டில் 4 ஆண்டு ஒருங்கி ணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்திற் கான நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப் பட்டது. ஜூன் 12 அன்று நடைபெற்ற தேர்வு தொழில்நுட்பக் கோளாறு கார ணமாக நிறுத்தப்பட்டதாக புகார் கூறப் பட்டது. இதையடுத்து, ஒத்திவைக்கப் பட்ட தேர்வு நடைபெறும் மறு தேதி விரை வில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஆதார் எண் இணைக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைந்து வருகின்ற னர். இதற்கிடையே, குடும்ப அட்டை யுடன் ஆதார் அட்டை இணைக்க வேண் டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு 2024 ஜூன் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற் போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்காக அருகில் உள்ள நியாய விலைக் கடை அல்லது பொது சேவை மையத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.