states

மேலாளர் கொலை: பாதுகாப்பு வழங்க வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை, ஜூன் 10- காஷ்மீரில் வங்கிக் கிளை மேலாளர் கொலை செய்யப்பட்டதை யடுத்து, ஊழியர்களுக்கும் அதிகாரிக ளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும் என வங்கி ஊழியர் சம்மேள னம் கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அரே மோகன் போரா கிளையில் உள்ள எலாகி  டெஹாட்டி வங்கியின் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்பான்சர் செய்யப்பட்ட பிராந்திய கிராமப்புற வங்கி) கிளை மேலாளராக ராஜஸ்தா னைச் சேர்ந்த  ஸ்ரீவிஜய்குமார் (29) பணி  புரிந்து வந்தார்.  2019ஆம் ஆண்டு வங்கி யில் சேர்ந்த அவருக்கு இந்த ஆண்டு  பிப்ரவரியில் திருமணம் நடை பெற்றது. இந்நிலையில் அவர் கடந்த ஜூன்  2ஆம் தேதி அலுவலக வளாகத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. 2022 மே 1ஆம் தேதிக்குப் பிறகு இது 8ஆவது கொலை என்று கூறப்படுகிறது. காஷ்மீர் மக்களின் கருத்துக்களை புறந்தள்ளி ஒன்றிய அரசு  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்ததும், காஷ்மீர் மக்களுக்கான விசேஷ அந்த ஸ்தை ரத்து செய்ததும் மீண்டும் தீவிர வாதம் தலை தூக்க காரணமாயிற்று. இந்த கொடூர தாக்குதல் குடும்ப  உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த வங்கித் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெளிப்படையான தாக்குதல் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு குறைபாடுகளையே அம்பலப்படுத்துகிறது. காஷ்மீர் மக்களுக்கு சேவை  செய்ய கடுமையான மன அழுத்தத்தில்  பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கு வங்கி நிர்வாகமும்  அரசும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த ஸ்ரீ விஜய்குமார் குடும்பத் திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற ஒரு கொடூரமான சம்பவம் நடைபெறமால் தடுக்க சம்பந்தப்பட்ட அனைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள் ளார்.