சென்னை, ஜன.13- 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோ தாவை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், தமிழில் போதிய திறன் இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறு வனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர் களை 100 விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் அனை த்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டா யம் என அரசாணை சொல்கிறது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசா ணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்றார் அமைச்சர். உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்தனர். அதன்பிறகு பேசிய அமைச்சர், “உறுப்பினர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை எப்போது வேண்டு மானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம். முத லில் இந்த மசோதா கொண்டு வரவேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இல்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகும் அபா யம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு, தேவை யான மாற்றங்களையும், திருத்தங்களை கொண்டு வரமுடியும்” என்றார். பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.