ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளியன்று சந்தித்தார். ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, டாக்டர் மகேந்திர முஞ்ச்பாரா மற்றும் ஜான் பர்லா ஆகியோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முன்வைத்து, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
ராணுவ தளபதி பூடான் பயணம்
இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் செல்ல உள்ளார். ‘‘ராணுவத் தளபதியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கை, நல்லுறவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிதலை அதிகப்படுத்தும். ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பூடான் அரசரை சந்திக்கவுள்ளார். மேலும், இந்தப் பயணத்தின்போது பூடான் நாட்டின் ராணுவ தளபதியுடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளவும் உள்ளார்’’ என ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் நில அதிர்வு!
வடக்கு சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட தகவலில், ஜூலை 11 அன்று இதே மாவட்டத்தின் அதே பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வு இதுவாகும்” என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கொரியா ஆட்சியர் குல்தீப் சர்மா கூறியுள்ளார்.
விளம்பரத்திற்கு ரூ.3,339 கோடி செலவிட்ட மோடி அரசு
ஒன்றிய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் விளம்பரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 339 கோடி செல விட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். ‘‘கடந்த 2017 முதல் நடப்பு நிதியாண்டின் ஜூலை 12 வரை, கடந்த 5 ஆண்டுகளில் நாளிதழ்களில் ரூ. ஆயிரத்து 756 கோடியே 48 லட்சம், தொலைக்காட்சிகளில் ரூ. ஆயிரத்து 583 கோடியே 01 லட்சம் என மொத்தம் ரூ.3,339.49 கோடி செலவிடப்ப ட்டுள்ளது. இந்த செலவுகள் ஒன்றிய தகவல் ஆணையத்தின் மூலமே செலவிடப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் தெரிவித்துள் ளார்.
சிரோமணி அகாலிதளம் கலைப்பு
பஞ்சாப், ஜூலை 29- 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளம் படுதோல்வி அடைந்ததையடுத்து தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) அதன் கட்சி அமைப்புகளை முற்றிலுமாக கலைத்துவிட்டது. தோல்வி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை கலைத்து மறுசீரமைக்கவும் கட்சியின் தொண்டர்கள், சீக்கியர் மற்றும் பஞ்சாபியர்களின் நலன்கள் கட்சியை புத்துயிர் ஊட்டு வதற்கான பரிந்துரைகளை ஆய்வுக்குழு வழங்கியிருந்தது.
‘வேலையில்லா திண்டாட்டத்திற்கு யார் பொறுப்பு?’
“நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்துள்ள புள்ளி விவரங்கள், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலைமையை எடுத்துக் கூறுகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி இளைஞர்கள் ஒன்றிய அரசுத் துறைகளில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் 7 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். நாட்டில் சுமார் ஒரு கோடி பணியிடங்கள் காலியாக இருக்கும்போது, இந்த வேலையில்லா திண்டாட்டத்திற்கு யார் பொறுப்பு?” என்று பாஜக எம்.பி. வருண் காந்தி மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
குஜராத் கள்ளச்சாராய பலி 57 ஆக அதிகரித்தது!
குஜராத் மாநிலம் போதாட் மாவட்டத்தில் ஜூலை 25-ஆம் தேதி கள்ளச்சாராயம் என்று கூறி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த தண்ணீரைக் குடித்த 60-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வியாழக்கிழமையுடன் 57 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்னும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த மதுபானத்தை விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதாட், அகமதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றமும், 5 காவலர்கள் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
புகையிலை பாக்கெட்டுகளில் புதிய சுகாதார எச்சரிக்கை
டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பொருட்களில் ‘புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது’ என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புதிய படம் பிரசுரிக்கப்படும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலைப் பொருட்களில் ‘புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்’ என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புகைப்படம் இடம்பெறும்” என்று கூறப்பட்டுள்ளது.
போதை மாபியாக்களை எந்த சக்தி பாதுகாக்கிறது?
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் வரை உயிரிழந்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வருத்தம் தெரிவித்துள்ளார். “குஜராத்தில் பல பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களும் தொடர்ந்து மீட்கப்படும் நிலையில், போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு கொடுக்கிறது?” என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். “மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் வாழ்ந்த இந்த பூமியில் இது கவலையளிக்கும் விஷயம்” என்றும் தமது டுவிட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம் அமல்படுத்த குழுவா? அரசு மறுப்பு
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி மாநிலங்களவையில் எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தார். அவர் கூறுகையில், ‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஆனால், பொது சிவில் சட்டம் குறித்த பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அளிக்கும்படி சட்ட ஆணையத்தை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மிருதி இரானி வீட்டு முன்பு காங்கிரசார் போராட்டம்
ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது பல்வேறு தலைவர்களின் கண்டனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், தில்லியில் உள்ள ஸ்மிருதி இரானியின் வீட்டு முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘பாஜக-வின் போக்கிரித்தனத்தை நாடாளுமன்றம் கண்டது. பாஜக எம்.பி.க்கள், சோனியா காந்தியுடன் சேர்த்து நாட்டின் கோடிக்கணக்கான பெண்களை அவமதித்துள்ளனர்’ என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் குற்றம் சாட்டினார்.
கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை உயர்ந்தது ஏன்?
சென்னை,ஜூலை 29- தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் உயர் கல்வியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளது என்று அமைச்சர் க.முன்முடி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக் ்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா வில் உரையாற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ நாட்டிலேயே உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக் கையில், தமிழகம்தான் முதல் இடம் வகிக்கிறது. குறிப்பாக 53 விழுக்காட்டி னர் உயர் கல்வி பெறுகின்றனர். அதிலும் தற்போது ஆண்களைவிட பெண்களே அதிகம் பயில்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில்கூட பதக்கம் பெறுபவர்களில் பெண்களே அதிகம். இதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற மாற்றம், வளர்ச்சி” என்றார்.
ஆருத்ரா கோல்டு: முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சென்னை,ஜூலை 29- ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1,678 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் 10 முதல் 30 விழுக்காடு வரை வட்டி தருவதாகக் கூறிய நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் வட்டியை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் தானாக முன்வந்து 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குநர்கள் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளில் வெள்ளியன்று (ஜூலை 29) தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தர விட்டார். மேலும் முதற்கட்டமாக, 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த வர்களுக்கு பணத்தை திரும்ப அளிப் பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், அடுத்த கட்டமாக, 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி வழக்கு: ஜாமீன் மனு ஒத்திவைப்பு
விழுப்புரம், ஜூலை 29- கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரி யர் உட்பட ஐந்து பேர் ஜாமீன் கேட்டு (ஜூலை 28) விழுப்புரம் மகளிர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த னர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சாந்தி முன்னிலையில் வெள்ளி யன் (ஜூலை 29) நடைபெற்றது. அப்போது நீதிபதி, “சின்னசேலம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ஜாமீன் கேட்கிறீர்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்ட நிலையில், அவர்கள் எந்தெந்த பிரிவுகளில் தகவலறிக்கை பதிந்திருப் பார்கள் என்பது தெரியாது. ஆகவே சிபிசிஐடி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து ஜாமீன் கோரலாம். இதனால் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்கு இந்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது. அந்த நாளன்று சிபிசிஐடி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.