states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘தினமலரை எரித்து போராட்டம்’

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்த சாமி, மாநிலச் செயலாளர் க.நிரு பன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக் கான காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் மனநிலையோடு தினமலர் பத்  திரிகை ஆகஸ்ட் 31 அன்று ஒரு செய்தி யை வெளியிட்டுள்ளது. மிகவும் அரு வருக்கத்தக்க மனிதத் தன்மையற்ற மனநிலை கொன்ற பத்திரிகை என்பதை  தொடர்ந்து தினமலர் இந்த செய்தியின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது.  இழிவான செய்தியை வெளியிட் டுள்ள, சாதியவாத, மதவாத சிந்தனை  கொண்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் பத்திரிகை யாக செயல்படும் தினமலரை இந்திய மாணவர் சங்கம் தமிழக மாணவர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறது. தினமலர் பத்திரிகையை பொதுமக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இன்றைய தினம் தினமலர் பத்திரி கையை கல்வி வளாகங்களில், பொது இடங்களில் எரித்து போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கிறது.

பாஜக கவுன்சிலர் கைது

   
தென்காசி மாவட்டம், தமி ழக-கேரளா எல்லை பகுதி யான புளியரை வழியாக  கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா  உள்ளிட்ட பொருட்களை கடத்திக் கொண்டு வருவதாக தென்காசி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சிறப்பு பிரி விற்கு  தகவல் வந்தது. இதை தொட ர்ந்து, சிறப்பு பிரிவினர் புளியரை சோதனை சாவடியில் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். அப்பொழுது கேரளா வில் இருந்து வந்த ஒரு வாகனத்தை மறித்து போலீசார் சோதனை செய்த போது, அதில் கட்டுக் கட்டாக பான்  மசாலா, குட்கா உள்ளிட்ட தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 1250 கிலோ போதை  பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் விற்  பனை செய்வதற்காக கொண்டு வந்த  செண்பகராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்  போது, அவர் செங்கோட்டை பகுதியை  சேர்ந்த பாஜக பிரமுகர் என்பதும், அவர் செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு கவுன்சிலராக உள்ளதும் தெரியவந்தது.

தினமலருக்கு டியுஜே கண்டனம்

டியுஜேவின் மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கை: மனிதநேயமிக்க காலை உணவுத் திட் டத்தை சேலம் பதிப்பு தினமலரில் பத்திரிகை தர்மத்தை மீறி இழி வுப்படுத்தியுள்ளது.  இளம் சிறார்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தத்  திட்டத்தை மிகவும் கொச்சைப்படுத்தி - கேவலப்படுத்தி செய்தி வெளி யிட்ட தினமலர் சேலம் பதிப்பிற்கு டி யூஜே தனது கடும் கண்டனத்தை  தெரிவிக்கின்றது. உடனடியாக சேலம் பதிப்பு தினமலர் நிர்வாகம் பகிரங்கமான வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவிக்க வேண்டும்.

3 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை  சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு

கோவை, மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு  பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயிலுக்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள்  நடைபெற்று வந்தன. இந்த நிலையில், சேலம், திருச்சி, நெல்லையில்  மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமி ழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வியாழனன்று சமர்ப்பித்தது. அதில் திருச்சியில் 26 கி.மீக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் என 45 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க  சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. நெல்லையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்  திற்கான வாய்ப்பு இல்லை என்றும் லைட் மெட்ரோ மட்டுமே  அமைக்க முடியும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு  தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை, ஆக. 31- அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்ட வணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி  வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உட்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட்டது. அதில், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. அதேபோல் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. 11ஆம் வகுப்பு மாண வர்களுக்கு காலை 9.30 முதல் பிற்பகல் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடக்கும். 6, 7, 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை 10 மணி  முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 9, 10 ஆம் வகுப்பு களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு  நடைபெறும். 

சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி: முதல்வர் இரங்கல்

சென்னை, ஆக. 31- விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருது நகர் மாவட்டம், செங்கமலநாச்சியார் புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி, கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவர் வினோதினியின் கணவர் அபிமன்னன் ஆகியோர், ஊரக வளர்ச்சி இயக்குநரை சந்தித்து மனு அளிக்க சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். கருப்பசாமி, அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் எனது  ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோமதிசங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்  பாண்டிச்செல்வியின் கணவர்)  அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தி யுள்ளேன். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்துள் ளார்.

விநாயகர் சதுர்த்தி: செப். 18 விடுமுறை

சென்னை, ஆக. 31- விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டா டப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாள் முன்பாக செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.