சென்னை, ஜூன் 2- நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பக்தவச்சலம், நிறு வனத் தலைவர் அ.மாயவன், பொதுச் செயலாளர் எஸ். சேதுசெல்வம் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்திற்குள், தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காடுகளுக்கும் மேலாக நிறை வேற்றிவிட்டோம் என்று பேசிவருவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் ஆசிரியர், அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட இன்றுவரை நிறைவேற்றாத நிலைதான் தொடர்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படாமல் உள்ளது. எனவே ஆசிரியர், அரசு ஊழியர்களின் உள்ளக் குமுறல் களை வெளிப்படுத்தவும், நமது கோரிக்கைகளின் மீது உடனடியாக முதல்வர் கவனத்தை ஈர்த்து அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியும் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில், தினசரி கருப்பு பேட்ஜ் அணிவது என்றும் மதிப்பீட்டுப் பணி நடைபெறும் ஒருநாள் மட்டும் காலையில் பணி தொடங்குவதற்கு முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.