states

நாகையில் ரூ.40 கோடியில் சிறிய மீன்பிடித்துறைமுகம்

சென்னை, ஏப்.6- நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தன் பேட்டையில் ரூ.40 கோடி  செலவில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதிய அறி விப்புகளை வெளியிட்ட அமைச்சர்,“ தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம்  வழங்கப்படும் இயற்கை மரணத் திற்கான நிவாரணத் தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்”என்றார்.  மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்க ளுக்கு உதவித் தொகையாக நாளொன்றுக்கு ரூ.350 உயர்த்தி வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறையில் ரூ.35  கோடியிலும் செங்கல்பட்டு மாவட்டம்,  

நெம்மேலிகுப்பத்தில் ரூ. 25 கோடியி லும், மயிலாடுதுறை மாவட்டம், சின்னாங்குடியில் ரூ.24 கோடியிலும்  மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.  நாகப்பட்டினம் மாவட்ட கடலோர கிரா மங்களில் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் ரூ.14 கோடியில் நிருவப்படும். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குவாடி மற்றும் ரோச்மாநகர் மீன்  இறங்குதளங்கள் தூண்டில் வளைவு களுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டுக்கோழி வளர்ப்பு நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளி களுக்கு 100 நாட்டு கோழிப் பண்ணை அலகுகள் அமைக்க 50 விழுக்காடு மானியத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம்  செலவில் வழங்கப்படும். கால்நடைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான துறை சார்ந்த பண்ணைகளில் உயர்  மரபுத்திறன் கொண்ட புதிய கால்நடை களை அறிமுகம் செய்யும் பொருட்டு 2,490 கால்நடைகள் ரூ.2 கோடியே 61  லட்சம் செலவில் கொள்முதல் செய்யப் படும். ஜல்லிக்கட்டு காளைகள் ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு அவற்றை பதிவு  செய்யவும், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை  ஆன்லைன் அமைப்பு மூலம் பதிவு செய்யவும் அனுமதி அளிக்கவும் ரூ.87 கோடி செலவில் இணைய முகப்பு உருவாக்கப்படும். உள்நாட்டு நாய் இனங்களில் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் சென்னையில் ரூ.5 கோடியே 95 லட்சம் செலவில் விரி வாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.