states

அன்னூரில் தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,டிச.16- கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்த மாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித் திருக்கிறது. இதுதொடர்பாக தொழிற்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தொழில் மற்றும் கல்வி துறை களில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீ டுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வரு கிறது. அந்த வகையில், கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ் நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது. கோவை மாவட்டத்தை பொரு ளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்ப டுத்தவும், மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு  செய்யப்பட்டு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது, மக்களவை உறுப்பி னர் அ.ராஜா, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும்,

விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனி யார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்)  மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகர மான இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அவர்களின் நலனிற் காக மட்டுமே செயல்படும். இத்தொ ழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும்.

எனவே, டிட்கோ  மூலம் தனியார் நிறுவனங்க ளுக்குச் சொந்தமான தரிசு  நிலங்களில் மட்டுமே தொழிற் பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது” என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக, கோவையில் தொழிற்பூங்கா அமைக்க நிலங் களை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள சங்கம் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாநிலைப் போராட் டங்களை நடத்தினர்.  கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய, திமுக எம்பி ஆ.ராசா, “தற்போதைய பேச்சுவார்த்தை யின்படி, கம்பெனிக்குச் சொந்த மான நிலங்களை மட்டும் எடுத்து  தொழிற்பூங்காவை தொடங்குவது. யாராவது சாகுபடி செய்யும் நிலங்களை எடுத்துக் கொள்ளுங் கள் என்று தாமாக முன்வந்து கொடுத்தால் மட்டும் அதை கையகப்படுத்துவது. தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் கையகப்படுத்துவதில்லை என்பதில் தமிழக அரசு திட்டவட்ட மாக உள்ளது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.