states

ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாக்பூரில் அடிவாங்கியது பாஜக!

நாக்பூர், அக்.17- நாக்பூர் மாவட்டத்தில், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு 13 ஊராட்சித் தலைவர் பதவி களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலை யில், நாக்பூர் கிராமின், கம்டி, சவனெர், கலமேஷ்வர், பார்ஷிவானி, உம்ரெட், மௌடா, குஹி, பிவாபூர் ஆகிய 9  ஊராட்சித் தலைவர் பதவிகளை காங்கி ரஸ் கட்சியும், நர்கெட், கடோல் உள்  ளிட்ட 3 ஊராட்சிகளை சரத் பவார்  தலைமையிலான தேசியவாத காங்கி ரஸ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு ஓரிடம் கிடைத்துள்  ளது. அந்த ஒரு இடமும் பாஜக-வுக்கு  கிடைக்கவில்லை.  ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட நாக்பூர் மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலேவும், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந் துள்ளார். இரண்டு துணைத்தலைவர் பதவிகளை மட்டுமே பாஜக பெற்றுள் ளது.  மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாதி கூட் டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த  ஆட்சியை ஏக்நாத் ஷிண்டே மூலம்  கவிழ்த்த பாஜக, சில மாதங்களாக ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி  நடத்தி வருகிறது. இந்நிலையில்தான், நாக்பூர் ஊராட்சித் தலைவர் தேர்த லில் பாஜக படுதோல்வி அடைந்துள் ளது. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தி லுள்ள நாக்பூர் என்பது, பாஜக-வின் குருபீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடமா கும். ஆனால், அங்கேயே ஊராட்சித்  தலைவர் தேர்தலில் அடி வாங்கியிருப் பது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.