சென்னை, ஜூன் 22- அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவ லில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் வியாழனன்று நடைபெற்றது. இதில், மேகலா தரப்பில் வழக்கறி ஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி அடுக் கடுக்கான வாதங்களை முன்வைத்தார். அப்போது, “செந்தில் பாலாஜி கைதில் சட்டவிரோத நடவடிக்கை உள் ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை உரிமை. கைதுக்கான கார ணத்தை தெரிவிக்காமல் யாரையும் காவலில் வைக்கக் கூடாது. அமைச்ச ரின் கைது குறித்த தகவலையும், கைதுக் கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை; இது அரசி யலமைப்புப் பிரிவு 15 ஏ-வில் குறிப்பி டப்பட்டு உள்ளது.
நீதிமன்றக் காவ லில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானதாக இருந்தால், ஆட் கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். செந்தில் பாலாஜியை காவேரி மருத் துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர, அம லாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. கடந்த ஜூன் 14-இல், செந்தில்பாலாஜி யை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அமலாக்கப் பிரிவுதான். எனவே, அவருக்கு போலி யான அறுவைச் சிகிச்சை என எப்படி கூற முடியும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். முன்னதாக, தங்கள் தரப்புதான் முத லில் வாதங்களை முன்வைக்க வேண் டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலா கக் கருதக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரி வித்தது. இறுதியாக, வழக்கு தொடர் பான, பதில் வாதத்துக்காக விசாரணை யை தள்ளி வைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கள், செந்தில் பாலாஜி கைது தொடர் பாக அவரது மனைவி மேகலா தாக் கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.